''நாயகி' சீரியலில் தொடர்ந்து நடிக்காததற்கு காரணம் இது தான்'' - வித்யா பிரதீப் விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியின் 'நாயகி' தொடர் புதிய கதைக் களத்துடன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அந்தத் தொடரில் இருந்து நாயகன், நாயகி மாற்றப்பட்டு கிருஷ்ணா மற்றும் நட்சத்திரா நடித்து வருகின்றனர்.

அந்தத் தொடரில் முதலில் ஹீரோயினாக நடித்து வந்த வித்யா பிரதீப்பிற்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ரசிகர்கள் அவரை ஆனந்தி என்றே குறிப்பிடும் அளவுக்கு அவரது வேடம் மிகவும் பிரபலம். இந்நிலையில் புதிய கதையில் அவர் இடம் பெறாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மேலும் அவர் நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. இந்நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''பொய்யான தகவல்கள். எனக்கு கொரோனா பயத்தால் நான் நாயகி தொடரில் இருந்து விலகவில்லை. எங்கள் பகுதி முடிந்தது. நான் இதனை கடந்த மாதமே பகிர்ந்திருந்தேன்.

இந்நிலையில் திடீரென நான் ஏன் விலகினேன் என்று கேட்கப்படும் கேள்விகளால் நான் அதிர்ச்சியடைந்தேன். நான் பாதியில் நிகழ்ச்சியை விலகமாட்டேன். நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து வித்யா பிரதீப்பை தொடர்ந்து பார்க்க முடியாதது குறித்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Vidya Pradeep clarifies about Sun TV Nayagi serial | சன் டிவி நாயகி தொடர் குறித்து வித்யா பிரதீப் விளக்கம்

People looking for online information on Nayagi, Sun TV, Vidya Pradeep will find this news story useful.