VIDUTHALAI: "என் அப்பா அம்மா செய்த புண்ணியம்".. இளையராஜா குறித்து நெகிழ்ச்சியான நடிகர் சூரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளையராஜா குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ஒன்னோடு நடந்தா" இன்று வெளியாகி உள்ளது. தனுஷ் & அனன்யா பட் குரலில் இளையராஜா இசையில் இந்த பாடல் வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் சுகா இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் குறித்தும் இசைஞானி இளையராஜா குறித்தும் நடிகர் சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "என் அப்பா அம்மா செய்த புண்ணியம் , என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம், இசைஞானி இளையராஜா
ஐயாவின் முத்தான பாடலில் எனக்கு நடிக்க கிடைத்த இந்த வாய்ப்பு. இதை ஏற்படுத்தி தந்த வெற்றிமாறன் அண்ணனுக்கும், பாடலாசிரியர் சுகா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் #ViduthalaiPart1" என சூரி நெகிழ்ச்சியாக குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Viduthalai Soori tweet about Music Director Ilaiyaraaja

People looking for online information on Ilaiyaraaja, Soori will find this news story useful.