சூர்யான்னு நெனச்சு சூரிய தேடி வந்த பாட்டி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வேடிக்கை சம்பவம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக விடுதலை திரைப்படம் உருவாகி வருகிறது. எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாகவும் உருவாகி வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | வாடிவாசல்.. வடசென்னை - 2 எப்போ? வெற்றிமாறன் கொடுத்த சூப்பர் அப்டேட்! FANS HAPPY அண்ணாச்சி

வெற்றிமாறனின் விடுதலை

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

விடுதலை படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ள சூழலில், முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழாவும் நடந்திருந்தது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், இசைஞானி இளையராஜா, தயாரிப்பாளர் எல்ரெட் குமார், நடிகர் விஜய் சேதுபதி, சூரி என ஒட்டுமொத்த படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

வேடிக்கையாக பேசிய சூரி

இந்த நிகழ்வில் விடுதலை திரைப்படம் குறித்து நிறைய விஷயங்களை நடிகர் சூரி பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் ஒன்று பற்றி வேடிக்கையாக சூரி சொன்ன விஷயமும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

விடுதலை படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் குறித்து சூரி பேசுகையில் சிறுமலை சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து பேசி இருந்தார்.

தேடி வந்த வயதான ரசிகை

"சூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி வேல்ராஜ் அண்ணன் சொல்லுவாரு, தினமும் சிறுமலை சூட்டிங் ஸ்பாட்ல ஒரு வயசான அம்மா உங்களைத் தேடி வந்துட்டு போயிட்டே இருக்கு, சூரிய பாக்கணும்ன்னு சொல்லிட்டே இருந்தாங்க அப்படின்னு சொன்னாரு. அப்படியா சரி இனி வந்தா சொல்லுங்க அப்படின்னு சொன்னேன். மறுநாள் நான் லேட்டா போனா அதுக்குள்ள அந்த அம்மா வந்துட்டு போயிடுச்சு. அதே மாதிரி பத்து நாள் தொடர்ந்து அந்த அம்மா வந்துட்டே இருக்கு. அதனால கண்டிப்பா நாளைக்கு பாத்துரலாம்னு இருந்தேன். அந்த அம்மாவோட வீடு பத்தி வேல்ராஜ் சார் சொன்னதா பசங்க வந்து சொன்னாங்க.

அதுக்கப்புறம் அந்த அம்மாவோட வீட்டு தேடி போயிட்டேன். என் பசங்க முன்னாடி போய் 'அப்பத்தா, சூரி வந்து இருக்காரு' சொன்னதுமே கஞ்சி குடிச்சிட்டு இருந்து அப்படியே போட்டுட்டு அந்த எச்சில் கையோட ஓடி வந்தாங்க. என்ன கட்டியணைச்சு, தம்பி நல்லா இரு, நல்லா இருன்னு சொன்னாங்க. 'என்னய்யா படத்துல சிவப்பா இருக்கே, இப்போ இதுல கருப்பா இருக்கே' அப்படின்னு கேட்டுச்சு. 'இல்ல, என் மேக்கப் மேன் அப்படி மேக்கப் போட்டு வச்சிருக்காருங்கன்னு' சொன்னேன்.

நான் சிவகுமார் பையன் இல்ல..

'உங்க அப்பாவுக்கு நான் பெரிய ரசிகை. உங்க அப்பா நடிச்ச ரோசாப்பூ ரவிக்கைக்காரி, அரண்மனைக்கிளி எல்லாம் அப்படி விரும்பி பார்த்தேன். நான் கல்யாணம் பண்ணி முதல்ல பார்த்து கூட ரோசாப்பூ ரவிக்கைக்காரி தான். சிவகுமார் மகன்தானே நீ?. உன் தம்பி இன்னொருத்தரும் நடிக்கிறாராம்ல்ல'ன்னு கேட்டாங்க.

'ஆத்தா, நான் சிவகுமார் பையன் இல்ல, சூர்யா அண்ணாக்கும் எனக்கும் வித்தியாசம் தெரிய வேண்டாமா?' ன்னு சொன்னேன். உடனே பட்டுன்னு கதவை சாத்திட்டு உள்ள போய்டுச்சு. கதவை திறக்கவே இல்ல, இது நிஜமா சூட்டிங் ஸ்பாட்ல நடந்தது. நேரா கேமரா மேன் வேல்ராஜ் எங்க இருக்காருன்னு தான் வந்தேன்" என கலகலப்பாக தெரிவித்திருந்தார்.

Also Read | "விடுதலை படத்துக்கு முதல்ல போட்ட பட்ஜெட் இத்தனை கோடி ரூபாய் தான்".. மனம் திறந்த வெற்றிமாறன்!

சூர்யான்னு நெனச்சு சூரிய தேடி வந்த பாட்டி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வேடிக்கை சம்பவம்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Viduthalai shooting spot fun incident actor soori explained

People looking for online information on Soori, Vetrimaaran, Viduthalai, Viduthalai shooting spot will find this news story useful.