VIDUTHALAI : “கோவத்துல கன்னா பின்னானு கத்துவேன்.. என்னுடைய இயலாமை.!” மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | Ilaiya Nila : ‘இளைய நிலா’ பாடலில் பணிபுரிந்த முக்கிய இசைக்கலைஞர் மரணம்.. ஜேம்ஸ் வசந்தன் உருக்கம்.!

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது வெளியாகியுள்ள விடுதலை படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மக்கள் படை தலைவராக வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். பழங்குடியின மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் பாத்திரமாக விஜய் சேதுபதி கதாபாத்திரம் அமைந்துள்ளது. கடைநிலை காவலராக சூரி டிரெய்லரில் தோன்றியுள்ளார். பழங்குடியின போலீஸாக வாத்தியாரை பிடிக்க முனைப்பு காட்டும் போலீசாக சூரி டிரெய்லரில் தோன்றியுள்ளார். மிரட்டலான இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி, சூரி, இசைஞானி இளையராஜா, எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, தான் 1500 படங்கள் பண்ணிய அனுபவத்தில் வெற்றிமாறன் ஒரு சிறந்த மற்றும் முக்கியமான இயக்குநர் என தெரிவித்ததுடன், இந்த விடுதலை படத்தில் இதுவரை கேட்டிராத புதிய இசையை கேட்கலாம் என்றும் தெரிவித்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இதில் பேசிய இப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், ஒளிப்பதிவாளர், எடிட்டர், விளம்பர போஸ்டர் வடிவமைப்பாளர் ப்ரொடக்ஷன் மேனேஜர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி பேசியதுடன், இசைஞானி இளையராஜாவுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் பேசினார். இறுதியாக உதவி இயக்குனர்கள் பற்றி பேசும்பொழுது, “நான் என்னுடைய சமநிலையை இழந்து விடுவேன். அவ்வளவு கோபம் வரும் என்பது எனது படக்குழு வட்டத்தில் இருப்பவர்களுக்கு தெரியும்.  எனக்கு ரொம்ப கோபம் வரும். கத்துவேன். கண்ணா பின்னா என கத்துவேன். அதற்கு காரணம் என்னுடைய இயலாமைதான். எனக்கு ஒரு விஷயம் முழுமையாக வரவில்லை, அது முழுமை பெறவில்லை, அதை கொண்டு வருவதற்கு எனக்கு தெரியவில்லை எனும்போது அந்த கோபம் வருகிறது. அதை காட்டுவதற்கான மிகவும் எளிமையான ஒரு இடமாக அசிஸ்டன்ட் டைரக்டர்கள் இருந்துவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் என்னை பொறுத்துக் கொள்கிறார்கள். என்னை பொறுத்துக் கொள்வது என்பது அனைவருக்குமே பொருந்தும்.

இருப்பினும் யார் என்ன தவறு செய்தாலும் அது அசிஸ்டண்ட் டைரக்டர்கள் மீதுதான் திரும்பும். எனவே அவர்களுக்கு நான் இந்த இடத்தில் நன்றியுடன் சேர்த்து மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.

Also Read | Vetrimaaran : "இதுக்காக தான் இளையராஜா Sir சீக்ரமா பேசிட்டு போனார்.!" — விடுதலை இசைவிழாவில் வெற்றிமாறன்.!

VIDUTHALAI : “கோவத்துல கன்னா பின்னானு கத்துவேன்.. என்னுடைய இயலாமை.!” மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன்.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaaran apologies for his anger viduthalai audio launch

People looking for online information on Vetrimaaran, Viduthalai will find this news story useful.