BHARATHI KANNAMMA: "ஹலோ.." அட.. வெண்பாவையே கதிகலங்க வைக்கும் புது கேரக்டரா..? பரபரப்பு ட்விஸ்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' சீரியல், தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

போடு! மாநாடு படத்தின் பிரபல வசனத்தை title ஆக வைத்த 'தில்லுக்கு துட்டு' இயக்குனர்!

பாரதி தான் தன்னுடைய தந்தை என்பதை தெரிந்த லட்சுமி, அடுத்ததாக தாய் கண்ணம்மாவை பாரதியுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதே போல, ஹேமாவை தன்னுடைய தங்கையை ஏற்றுக் கொண்டு, அவரிடமும் அதிக பாசம் காட்டி வருகிறார் லட்சுமி.

ஹேமாவின் ஆசை

இதனிடையே, கண்ணம்மா தான் தன்னுடைய நிஜ தாய் என்பதை தெரியாத ஹேமா, அவர் மீது அதிக அன்பு கொண்டு, தன்னுடைய தாயாகவும் வரவேண்டுமென விருப்பப்படுகிறார். இதற்காக வேண்டி, கண்ணம்மாவை நேரில் சந்தித்து, தன்னுடைய தாயாக பாரதியுடன் இணைந்து வாழவும் கேட்டுக் கொள்கிறார். ஆனால், இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் திகைத்து நின்றார் கண்ணம்மா.

கோபத்தின் உச்சத்தில் இருந்த சவுந்தர்யா

இப்படி முழுக்க முழுக்க பாசம் மற்றும் எமோஷன்கள் நிறைந்த காட்சியாக பாரதி கண்ணம்மா தொடர் சென்று கொண்டிருக்கும் போது தான், அதிரடி திருப்பம் ஒன்று ஏற்பட்டது. பாரதியின் தாய்  சவுந்தர்யாவுக்கு புதிதாக ஒருவர் மெசேஜ் செய்து தொந்தரவு செய்ய, கோபத்தின் உச்சத்திற்கே செல்கிறார் சவுந்தர்யா.

அது மட்டுமில்லாமல், அந்த நபர் தனியாக சந்திக்கலாமா என கேட்கவே, சவுந்தர்யாவின் கண்கள் இரண்டும் சிவந்து போனது. தான் யார் என்பதை காண்பிக்க வேண்டி, நேரில் வருவதாக உறுதி அளிக்கிறார் சவுந்தர்யா. இதற்காக கணவர் வேணுவிடம் பொய் சொல்லி விட்டு, நேரில் சென்ற பிறகு தான், கல்லூரியில் தங்களுடன் ஒன்றாக படித்த விக்ரம் தான் மெசேஜ் அனுப்பினார் என்ற உண்மை தெரிய வருகிறது.

90'ஸ் பிரபல ஹீரோ

இந்த விக்ரம் கதாபாத்திரத்தில் வருபவர் வேறு யாரும் இல்லை. 90'ஸ் களில் பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பரத் கல்யாண் தான். திடீரென பாரதி கண்ணம்மா தொடரில் இவர் என்ட்ரி கொடுத்துள்ளதால், ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.

வெண்பாவுக்கு வரும் மர்ம அழைப்பு

இது ஒருபுறம் இருக்க, பாரதியை அடைய வேண்டி, பல தீய வேளைகளில் ஈடுபட்டு வந்த வெண்பாவுக்கும் ஒரு மர்ம அழைப்பு வந்த வண்ணம் உள்ளது. தன்னுடைய போனில் யாரோ தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருப்பதாக, வெண்பாவின் போனை எடுத்து வந்து கையில் கொடுக்கிறார் வேலை செய்யும் பெண்மணி.

ஆடிப் போன வெண்பா

அப்போது அழைத்து யார் என பார்த்த வெண்பா, அதிர்ச்சியில் உறைகிறார். "அய்யய்யோ இவங்களா?. இவங்க எதுக்கு இப்போ திடீர்னு திரும்ப திரும்ப கூப்பிடுறாங்க. வாழ்க்கைல யாருகிட்ட இருந்து போன் வரவே கூடாதுன்னு நெனைச்சேனோ, அவங்க எதுக்கு என்ன கூப்பிடனும்?" என மனதில் நினைத்துக் கொள்ளும் வெண்பாவின் முகம், அச்சத்திலும் அதிர்ச்சியிலும் குழம்பி போய் கிடக்கிறது.

அந்த வேளையில், மீண்டும் அழைப்பு வரவே, போனை ஸ்விட்ச் ஆப்பே செய்து விடுகிறார் வெண்பா. ஏன் இத்தனை ஆண்டுகள் கழித்து அவர் அழைக்க வேண்டும் என்ற சிந்தனையிலும் வெண்பா ஆழ்ந்திருக்கிறார்.

ஏற்கனவே, விக்ரம் என்னும் கதாபாத்திரத்தில்,  பரத் கல்யாண் களமிறங்கி உள்ள நிலையில், தற்போது வெண்பாவை யாராவது மிரட்ட வேண்டி இப்படி செய்கிறார்களா என்ற கேள்வி, பாரதி கண்ணம்மா ரசிகர்களை சற்று குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இளையராஜா யுவன் இசையில் மாமனிதன்…. இசை வெளியீடு எங்கு? எப்போது? Viral போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Venba gets fear after gets anonymus call for continuously

People looking for online information on Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial Promo, Bharathi Kannamma Serial Today, Bharathi Kannamma Serial today episode, Venba, Vijay Television will find this news story useful.