பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வேல்முருகனின் வேதனை பதிவு... "அந்த ஒருத்தர் மட்டும் தான் பாவம்"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் வேல்முருகன் எவிக்ட் செய்யப்பட்டார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு முதல் முறையாக மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அதில்நமக்கு தெரியாத பல விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.  அவர் கூறும்போது  "முதல் நாளில் இருந்தே பாலாவை நான் நண்பராக தான் பார்த்தேன். ஆனால் என்னை அவர் தகுதி குறைவாக நினைத்து பல இடங்களில் என்னை ஒதுக்கினார். மேலும் ஒரு எவிக்ட் செய்தபோது ஆஜித்தை தூக்கி சுற்றினார். அப்போது நான் அதை கவனிக்கவில்லை. பின்பு டிவியில் பார்த்த பொழுது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது" என்றார்.

மேலும் அவர் "பாலாஜி என்னவோ அந்த நிகழ்ச்சிக்கு அவர் தான் பிக்பாஸ் போல் நினைத்துக் கொண்டிருக்கிறார். சனம் மட்டும் தான் அந்த வீட்டில் உண்மையிலேயே பாவமானவர். அவர்கள் கஷ்டப்படுத்துவது கூட தெரியாமல் திரும்பத் திரும்ப போய் பேசுகிறார்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Velmurugan first emotional interview after biggboss வேல்முருகனின் முதல் வேதனை பதிவு

People looking for online information on Balaji, Sanam, Velmurugan will find this news story useful.