"ஒயரமா இருந்தா நீ MASS-ஆ? உன்ன வெச்சு செய்றேன் இரு".. நிரூப் குறித்து வெடித்து தள்ளிய வருண்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் நிரூப் மற்றும் வருண் இருவருக்கும் இடையேயான மோதல்கள் அண்மைக்காலமாகவே வலுவான சண்டைகளாக உருவெடுத்து வருகின்றன.

Advertising
>
Advertising

தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மிரர் டாஸ்க் மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிட்ட ஒரு போட்டியாளருக்கு இன்னொரு நபர் கண்ணாடியாக இருந்து அந்த போட்டியாளர் பற்றிய தன்னுடைய கருத்தை, முன் வைக்க வேண்டும். அது விமர்சனமாகவும் இருக்கும்.

ஆனால் அந்த கருத்தை அல்லது விமர்சனத்தை மிக நீண்ட நேரம் கேட்க முடியாமல் போனால், அந்த போட்டியாளர் குறிப்பிட்ட அந்த நேரம் முடிவதற்குள் விலக முடிவு எடுக்கலாம். அவ்வாறு செய்யும்போது தன்னிடம் இருக்கும் ஒரு பேட்ஜ்ஜை, எதிரணியில் இருப்பவருக்கு கொடுக்க வேண்டும்.

இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு இந்த போட்டிகள் நடைபெறும் நிலையில், இறுதியில் எந்த அணியிடம் நிறைய பேட்ஜ்கள் உள்ளனவோ, அந்த அணிதான் இந்த டாஸ்கில் வெற்றி பெற்ற அணியாக கருதப்படும். இந்த நிலையில் வருண் மற்றும் நிரூப் இருவரும், ஒருவருக்கொருவர் கண்ணாடியாக செயல்பட்டு வருகின்றனர்.


தற்போது நிரூப்பின் கண்ணாடியான வருண்,  “இன்று முழுவதும் நான் சொல்வதை நீ கேட்டுத்தான். நீ கேட்கவில்லை.. என்றால் போ.. நான் வெச்சு செய்கிறேன். பார்த்துக்கொள்கிறேன்!” என்று சொல்கிறார். சொல்லிய கொஞ்ச நேரத்தில் அதை நிறைவேற்றுகிறார்.

ஆம், நிரூப்பின் கண்ணாடியாக இருக்கும் வருண், நிரூப் குறித்த தன்னுடைய கருத்தை முன்வைக்கிறார். அதில், “உன்னுடைய ஆளுமையை நீ செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில் எல்லோரும் நீ சொன்னதைக் கேட்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாய். அனைவரும் நீ சொன்ன படி கேட்டார்கள்.

நான் உட்பட.. ஆனால் நீ மட்டும் ஏன் சொல்வதை எதையும் கேட்க மாட்டேன் என்கிறாய்? இல்லை நீ உயரத்தில் பெரியவனாக இருந்தால்... நீ பெரிய மாஸா? நீ பண்ணு... என்ன வேண்டுமானாலும் பண்ணு.. நான் உன்னை வச்சி செய்கிறேன்!” என்று காட்டமாக பேசியிருக்கிறார்.

Varun viral speech about Niroop in mirror task biggbosstamil5

People looking for online information on Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, Niroop Nandakumar, Varun will find this news story useful.