ஆக்ரோஷ சண்டை, தவறான வார்த்தை.. உங்களை கொன்னுடும்... BBULTIMATE வனிதா பரபரப்பு ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹாட்ஸ்டார் தளத்தில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான இதர பிக்பாஸ் சீசன்களை போல், அல்டிமேட் நிகழ்ச்சியும் ரசிகர்களை கவர தவறவில்லை.

Advertising
>
Advertising

அல்டிமேட்! சூர்யா - வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’! "உதவி இயக்குநராக" இணையும் பிரபல முன்னணி நடிகர்

முந்தைய போட்டியாளர்களின் பட்டியலில் இருந்து, தேர்வு செய்யப்பட்டவர்கள், அல்டிமேட் நிகழ்ச்சியில் களமிறங்கினர்.

இதில், சுஜா, அபிநய், சினேகன் உள்ளிட்ட சிலர் வெளியேறிய நிலையில், மன உளைச்சல் காரணமாக, நிகழ்ச்சியின் பாதியில், தாமாக விலகிச் சென்றார் வனிதா.

கடுப்பில் ரசிகர்கள்

தொடர்ந்து, ரம்யா பாண்டியன், KPY சதீஷ் உள்ளிட்டோர் என்ட்ரி கொடுக்க, நாளுக்கு நாள்; கன்டென்ட் பஞ்சமே இல்லாமல், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, சில போட்டியாளர்களின் செயலால், ரசிகர்களும் அதிகம் கொதித்து போயுள்ளனர்.

ஓயாத சர்ச்சைகள்

சில தினங்களுக்கு முன், அனிதா கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இதற்கிடையில், ஜூலி - அனிதா மோதலும் பெரிய அளவில் விவாதத்தை உண்டு பண்ணியிருந்தது. தொடர்ந்து, நிரூப் மற்றும் பாலாஜி ஆகியோர், மாறி மாறி அடிதடி உண்டாக்க சென்றது வரை மிகப் பெரிய அளவில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

சிம்பு நடவடிக்கை எடுக்கணும்

இது போதாது என்று, ஜூலியை பார்த்து நிரூப் கொச்சை வார்த்தையை பயன்படுத்த, மீண்டும் ஒருமுறை கோதாவில் குதித்தனர் ரசிகர்கள். இந்த வார இறுதியில், நிச்சயம் சிம்பு அவர்கள், நிரூப்பை கேள்வி கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். தொடர்ந்து, இரண்டாவது முறையாக, ஜூலியை பார்த்து, நிரூப் கொச்சை வார்த்தையை பயன்படுத்தியுள்ளது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய செயல் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

விமர்சித்த வனிதா

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவு இல்லாமல், அல்டிமேட் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. முன்னதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் பாதியில் இருந்து வெளியேறிய வனிதா, எரிச்சலூட்டும் பைத்தியக்கார வீட்டில் இருந்து வெளியேறியதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், பொழுதுபோக்கு நிகழ்ச்சி அதன் பொழுது போக்கு அம்சத்தை இழந்து விட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மகிழ்ச்சியா இருக்கேன்

இந்நிலையில், மீண்டும் ஒருமுறை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி குறித்து, தற்போது ட்வீட் ஒன்றை வனிதா செய்துள்ளார். அதில், "வன்முறை, ஆக்ரோஷமான சண்டைகள், தவறான வார்த்தைகள் மற்றும் மன உளைச்சல் உங்களைக் கொல்லக் கூடும். நான் அதற்கு எதிரான நபர். அது என் வாழ்க்கையில் சில சிறந்த முடிவுகளையும் எடுக்க வைத்தது. இதனால், நான் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கிறேன்" என வனிதா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், #BBUltimate என்ற ஹேஸ்டேக்கும் வனிதாவின் பதிவில் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்து வரும் விஷயங்களை வைத்து, வனிதா செய்துள்ள ட்வீட், பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக தான், வனிதா அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியிருப்பார் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

"என்னடா சொன்னே.." நிரூப் பேசிய கொச்சை வார்த்தை..? கொதித்த ஜூலி.. சிம்புவிடம் fans கோரிக்கை

தொடர்புடைய இணைப்புகள்

Vanitha tweets about bb ultimate show gone viral among fans

People looking for online information on BB Ultimate, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Vanitha, Vanitha Recent Tweet will find this news story useful.