"வாரிசா?... துணிவா?".. திருச்செந்தூர் கோவிலில் வடிவேலு சொன்ன ‘நச்’ பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம், 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஜெயசுதா, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா உள்ளிட்ட ஏராளமானோர் இணைந்து நடித்துள்ளனர்.

வாரிசு படத்தில் இதுவரை 3 பாடல்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா டிச.24-ல் நடக்கிறது.

அதே போல முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படமும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை H வினோத் இயக்கி வருகிறார். மேலும் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். துணிவு படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், 3 ஆவது பாடலும் டிசம்பர் 25 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களான அஜித் குமார் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆவதால் இருவரின் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில், வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் குறித்து நடிகர் வடிவேலு பேசிய விஷயங்கள் அதிகம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் வடிவேலு நடிப்பில் சமீபத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை சுராஜ் இயக்கி இருந்தார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை தொடர்ந்து, சந்திரமுகி 2, மாமன்னன், விஜய் சேதுபதியுடன் ஒரு படம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் வடிவேலு நடித்துள்ளார். இதனிடையே, சமீபத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வடிவேலு வருகை புரிந்திருந்தார்.

அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டிருந்தனர். அந்த சமயத்தில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது பற்றியும், எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்பது பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த வடிவேலு, "எனக்கு அத பத்தி தெரியலையே. எல்லா படமும் நல்லா ஓடணும். தயாரிப்பாளர் நல்லா இருக்கணும். சினிமா நல்லா இருந்தாதான் எல்லாரும் நல்லா இருக்க முடியும். அதுனால எல்லா படமும் ஓடணும்" என கூறினார். அதே போல, தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்தும் வடிவேலு பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu answers about thunivu and varisu movie

People looking for online information on Ajith, Thunivu, Vadivelu, Varisu, Vijay will find this news story useful.