BREAKING : பிரபல இயக்குநரின் படத்துக்காக முதல் முறையாக இணையும் இந்த இரண்டு ஹீரோக்கள்..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் திரைப்படத்துக்காக இரண்டு முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடிக்கின்றனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுசீந்திரன். இவர் வென்னிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குநரானார். இதை தொடர்ந்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி, ஜீனியஸ், கென்னடி க்ளப் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். 

இந்நிலையில் தற்போது சுசீந்திரன் புதிதாக இயக்கவுள்ள திரைப்படத்தில் இரண்டு முன்னணி நாயகர்கள் இணையவுள்ளனர். சென்னை-28, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜெய் மற்றும் ஈரம், மிருகம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆதியும் இத்திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நேற்று ஆரம்பமாகியுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இத்திரைப்படம் தயாராகவுள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

சுசீந்திரனின் அடுத்த படம் | Two leading heroes joins for suseenthiran's next film

People looking for online information on Aadhi, Jai, Suseenthiran will find this news story useful.