அந்த வார்த்தைக்கு இன்னும் 'அர்த்தம்' புரியலயா?... 'ஆங்ரி' மோடில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முதல் மூன்று சீசன்களில் இதுபோல இல்லை என ஆறுதல் பட்டுக்கொள்ளும் அளவுக்கு இந்த சீசன் உள்ளது. இதுவரை ரேகா, வேல்முருகன் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கின்றனர். ஆனால் நிகழ்ச்சியில் வருவதற்கு முன்பே அவர்கள் வீட்டிற்கு சென்று விட்ட விவரம் சமூக வலைதளங்களில் வெளியாகி விடுகிறது. வேல்முருகன் கூட பரவாயில்லை.

ரேகா வீட்டிற்கே சென்று வீட்டுக்கு வந்துட்டேன் என ஸ்டேட்டஸ் போட்ட பின்னர் தான் நிகழ்ச்சியில் அவரது வெளியேற்றம் காண்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பதை எல்லாம் பார்த்தால் இந்த வாரம் சோமசேகர் தான் வீட்டைவிட்டு வெளியேறுவார் என ரசிகர்கள் ஆருடம் கூறி வருகின்றனர். இதுவரை பெரிதாக கண்டெண்ட் எதுவும் அவர் கொடுக்கவில்லை. ஆஜீத் கூட சண்டை போட்டு விட்டார் ஆனால் இவர் வாயே திறக்க மாட்டேன் என்கிறாரே என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பப்பெட் எனும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்று அர்ச்சனாவிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்தார். பதிலுக்கு அர்ச்சனா அவர் கோர்ட் டாஸ்க்கில் என்ன எழுத வேண்டும் என அவருக்கு விளக்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் நாலு வாரம் ஆகியும் இன்னும் விளையாடாம அவர்கிட்ட போய் என்ன எழுதறதுனு கேட்டுட்டு இருக்கீங்க? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

This week Somashekhar maybe evict from Bigg Boss House?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.