என்ன இத்தனை பேரா?... அப்போ சிறப்பான, தரமான ஒரு 'சம்பவம்' காத்திருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உண்மையான பிக்பாஸ் இன்று தான் துவங்கவிருக்கிறது. இதுவரை வானத்தை போல படம் போல இருந்த வீடு நேற்று முதல் சற்று டெரராக மாறியிருக்கிறது. குறிப்பாக ஆரி, ரியோவுக்கு ஏராளமான பேர் மாஸ்க்கை அளித்ததால் நாளையில் இருந்து இதற்கு சில,பல பஞ்சாயத்துகள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ரேகா வெளியேறி விட்டார். மீதமிருக்கும் 16 போட்டியாளர்களில் ஆஜித் சிறப்பு பாஸ் வைத்திருப்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது.

சனம், வேல்முருகன் பந்து டாஸ்க்கில் வென்றதால் அவர்கள் இருவரையும் யாரும் நாமினேட் செய்ய முடியாது. இதேபோல வீட்டின் தலைவர் என்பதால் ரியோவையும் நாமினேட் செய்ய முடியாது. மொத்தம் 4 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டனர். இதனால் மீதமிருக்கும் 12 போட்டியாளர்களைத் தான் அனைவரும் மாற்றி,மாற்றி நாமினேட் செய்ய வேண்டியது இருக்கும்.

அதே நேரம் ஆஜித், சனம், வேல்முருகன், ரியோ ஆகியோர் மற்றவர்களை நாமினேட் செய்யலாம். இதனால் இந்த வார பட்டியலில் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஷிவானி, கேப்ரியலா, பாலாஜி ஆகியோர் இடம் பிடிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஷிவானி, கேப்ரியலா, சுரேஷ் ஆகிய மூவரையும் ஆர்மி காப்பாற்றி விடும். மற்றவர்கள் நிலை என்ன என்பது வரும் வாரம் தெரியவரும் என்பதால் அதுவரை காத்திருப்போம்!

தொடர்புடைய இணைப்புகள்

This week nomination Process maybe tough for Contestants

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.