THIRUCHITRAMBALAM: "ஆளு கரடு முரடு.. அவர் என் டார்லிங்.. என் செல்லப்பிள்ளை" - தனுஷ் நெகிழ்ச்சி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்டு 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் லால்சிங் சத்தா..‌ ஆமிர்கானுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்!

இப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபல இயக்குனர் இமயம் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முறையே தனுஷின் தாத்தா மற்றும் அப்பா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு  ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ விழாவில் இயக்குநர், நடிகர் பாரதிராஜா பற்றி பேசிய நடிகர் தனுஷ், “என் டார்லிங்.. என் செல்லப்பிள்ளை.. பாரதிராஜா.. பாரதிராஜா என்கிற பெயர், அது ஒரு பெயரா.? அது உலக தமிழர்களின் அடையாளக் குரல். இன்றைக்கும் ஒரு மேடையில் ஏறி என் இனிய தமிழ் மக்களே என்று அவர் சொன்னால் உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு தமிழனின் கையும் தன்னையறியாமல் தானாக தட்டும்.

ஆளுதான் கொஞ்சம் பார்ப்பதற்கு கரடு முரடாக இருப்பாரே தவிர அவர் ஒரு குழந்தை.  (பாரதிராஜாவை பார்த்து) உங்களுடன் பழகியதில், பணிபுரிந்ததில், உங்களை அறிந்து கொண்டதில், நான் மிகவும் கர்வப்படுகிறேன், சந்தோஷப்படுகிறேன்.. ஐ லவ் யூ சார்.” என்று பேசினார். இதைக் கேட்டு நெகிழ்ந்த பாரதிராஜா கையெடுத்து கும்பிட்டார்.

Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் நயன்தாரா & விக்னேஷ் சிவன் திருமண வீடியோ.. வெளியான சூப்பர் டீசர்!

தொடர்புடைய இணைப்புகள்

Thiruchitrambalam Dhanush heartfelt speech about Bharathiraja

People looking for online information on Bharathiraja, Dhanush, Thiruchitrambalam will find this news story useful.