இந்த 'ரெண்டு' பேருல ஒருத்தரு தான் வெளில போக போறாங்க... ரசிகர்கள் ஆரூடம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் நேற்று நாமினேஷன் தொடங்கியது. இதில் சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன், ஆஜித், ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ரேகா மற்றும் கேப்ரியலா ஆகிய 7 பேரும் இடம்பெற்று இருக்கின்றனர். இந்த லிஸ்டில் இடம்பெற வேண்டிய சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டின் கேப்டன் என்பதால் இந்த வாரம் தப்பித்து விட்டார்.

இந்த நிலையில் சனம் ஷெட்டி அல்லது ரேகா இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறுவார்கள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். போட்டியாளர்கள் அதிகம் நாமினேட் செய்த நபராக சனம் ஷெட்டி இருக்கிறார். ரேகா பெரிதாக கண்டெண்ட் எதுவும் தருவதில்லை. இதனால் தான் இந்த இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என கூறப்படுகிறது.

ஆனால் சுரேஷ் சக்கரவர்த்திக்கு அடுத்து சனம் ஷெட்டி சண்டை போடும் நபராக இருப்பதால் அவரை பிக்பாஸ் வெளியில் அனுப்ப மாட்டார் என்றே தோன்றுகிறது. மறுபுறம் சம்யுக்தாவும் இந்த பட்டியலில் அடிபட்டு வருகிறார். ஆனால் அவருக்கு என ஒரு ரசிகர் வட்டம் உருவாகி இருப்பதால் அவர் வெளியேற்றப்பட மாட்டார் என்றே தெரிகிறது. ஆனால் பிக்பாஸின் கணக்கு என்னவென்று தெரியவில்லை என்பதால் காத்திருந்து பார்க்கலாம்!

தொடர்புடைய இணைப்புகள்

These contestant maybe evict from Bigg boss House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.