"என் திமிரான தமிழச்சி".. தனது காதலியை அறிமுகம் செய்த பாடகர் தெருக்குரல் அறிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அரக்கோணத்தை சார்ந்த 'தெருக்குரல்' அறிவு, ராப் பாடல் இசைக்கலைஞர் மற்றும் சினிமா பாடலாசிரியராக பிரபலமானவர்.

Advertising
>
Advertising

தமிழ்நாட்டின் பட்டி தொட்டி முதல் வெளிநாட்டுப் பெரு நகரங்கள் வரை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பாடல், 'எஞ்சாய் எஞ்சாமி'. இதன் பாடலாசிரியர் தெருக்குரல் அறிவு ஆவார். ஆதி மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடலாக இப்பாடலை அறிவு உருவாக்கி இருந்தார். உலகமெல்லாம் இருக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த பாடலில் வரும் வள்ளியம்மாள் ‘தெருக்குரல்’ அறிவின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் இந்த பாடலை, ஏ.ஆர்.ரஹ்மான் மாஜா யூ-ட்யூப் தளத்தில் வெளியிட,  இப்பாடல் பல இடங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. உலகமெங்கும் ஹிட் அடித்த இந்த பாடல் பல்வேறு மொழிகளிலும் உருவாக்கப்பட்டது.

 

 

 


இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  "என் திமிரான தமிழச்சி" எனப்  தலைப்பிட்டு சமூக செயற்பாட்டாளரான  கல்பனா அம்பேத்கர் என்ற பெண்ணைக் காதலிப்பதாகத் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். காதலர்கள் இருவரும் தங்களது கால்கள் இருக்கும் போட்டோவை அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Therukural Arivu Latest Instagram Post about His Lover

People looking for online information on Arivu, Therukural arivu will find this news story useful.