கோதாவுல குதிச்ச தாமரை.. சின்னா பின்னமான ஐக்கியின் மண்டை.. ‘பிக்பாஸில்’ ஒரு ரோசமான சண்டை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் ஆரம்பத்தில் இருந்ததை விட போகப்போக டாஸ்குகள் அதிகமாகின. இதனால் கொஞ்சம் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலகலப்பை மறந்து போயிருந்தனர்.

பிக்பாஸ் சீசன் 5-ஐ நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் முதலில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து முக்கிய போட்டியாளரான நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டைவிட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியதாக பிக்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து முதல் எலிமினேஷன் ரவுண்டில் பிரபல போட்டியாளர் நாடியா வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்று நிறைய டாஸ்குகளை சந்தித்து வந்தனர். அதற்குள்ளாகவே பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் குழுக்களாக பிரிவது, ஒரு குழுவில் இருந்து இன்னொரு குழுவுக்கும் தூது போவது போல் தகவல் போவது, வியூகம் அமைத்து குரூப்பிசத்தை வலுப்படுத்துவது போன்றவை தொடர்ந்து நடந்தன.

இதெல்லாம் வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கொஞ்சம் தாமதமாக நடக்கும். ஆனால் இதெல்லாம் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் மிக விரைவில் நடப்பதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆளாக பிக்பாஸ் வீட்டை விட்டு அபிஷேக் வெளியேற்றப்பட்டார்.

முன்னதாக காயின் டாஸ்க் நடைபெற்றது. இதில் அவரவரும் காயின்களை எடுத்து மற்றவர்களுக்கு உதவுவதாகவும், சிலர் தங்களுக்காகவும் எடுத்து வைத்துக் கொண்டனர். சிலர் மற்றவர்களுக்கு உதவுவதாக சொல்லி தங்களுக்காக எடுத்து வைத்தனர். சிலர் குழுக்களாக பிரிந்து காயின்களை எடுத்து யாருக்கு உதவலாம் என்கிற உரையாடலைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தனர்.

கடைசியாக அபிஷேக வெளியேறும் பொழுது காயின்களை கொடுத்து நண்பர்கள் காப்பாற்ற முன்வர, அபிஷேக்கோ, “இது மக்கள் தீர்ப்பு.. இதில் நான் மாற்றம் செய்ய விரும்பவில்லை!” என்று கூறிவிட்டார். அதற்குள் பிக்பாஸ் அபிஷேக் காயினை  பயன்படுத்துவதற்கான அவகாசம் முடிந்து விட்டதாக குறிப்பிட, அபிஷேக் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் தூங்கும் அறையில் அனைவரும் அமர்ந்து கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ராஜூ, இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா என அனைவருமே ஜாலியாக பேசிக் கொண்டிருந்தபொழுது, அவர்களுக்கிடையில் குத்துச்சண்டை போட்டிகளில் வருவதுபோல விளையாட்டாக சண்டை செய்து பார்த்து கொண்டனர்.

அப்போது நிரூப், ராஜூவை குத்துச்சண்டையில் வருவதுபோல ஸ்மாக் டவுன் செய்ய  முயற்சி செய்ய ராஜூ, கடைசியில் நிரூப்பிடம் கொஞ்சம் பாடாய் பட்டு விட்டார். “அடிப்பதுபோல் நடிக்கச் சொன்னால் இப்படி பண்றியேயா!” என்று ராஜூ காமெடியாக கூறினார்.

அடுத்து, தாமரை பிரியங்காவிடம் மோதா பிரியங்கா பயந்து உட்கார்ந்தேவிட்டா. பின்னர் ஐக்கி மற்றும் தாமரை இருவருக்குமிடையில் ராஜூ ரெஃப்ரியாக இருந்து சண்டையை துவங்கி வைக்க, அவ்வளவுதான் தாமதம், ஐக்கியின் முடியை பிடித்து தாமரை கோதாவில் இறங்கினார். ஏற்கனவே ஐக்கியின் முடி பெட்ரூமில் உதிர்ந்து கிடப்பதாக கடந்தவாரம் பிக்பாஸ் அந்த வீட்டை சுத்தப்படுத்தும் போது ராஜூ புலம்பிக் கொண்டிருந்தார்.

இந்தநிலையில் ஐக்கி மற்றும் தாமரை சண்டை போடும் புகைப்படங்களை ஆங்காங்கே இணையதளங்களில் பார்த்த பலரும், இவர்களுக்கு என்ன ஆச்சு? இப்படி இறங்கி முட்டிக் கொள்ளும் அளவுக்கு? ஏன் கோதாவில் இறங்கி இருக்கிறார்கள்? அப்படி என்ன பிரச்சனை? என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் இவர்கள் விளையாட்டாக சண்டை போட்டுக்கொண்டது எபிசோடை பார்த்தவர்களுக்குத்தான் வெளிச்சம்!

தொடர்புடைய இணைப்புகள்

Thamarai selvi iykki berry wrestling fight biggbosstamil5

People looking for online information on Abhinav, Abishek Raaja, AbishekRaaja RajuJeyamohanAksharaReddy PriyankaDeshpande, Akshara Reddy, அபிஷேக், இமான் அண்ணாச்சி, பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggboss abishek, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImmanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Pavani Reddy, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision, VJ Priyanka will find this news story useful.