ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்ட தாமரை & பிரியங்கா?? BIGGBOSS வீட்டுக்குள் பரபரப்பு சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay TV BiggBossTamil5: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில், பிக்பாஸ் வீட்டுக்குள் தாமரை மற்றும் பிரியங்காவின் சண்டை உலகறிந்ததுதான் என்றாலும், இப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு சண்டை போய்விட்டதா என்கிற கேள்வி புதிய ப்ரோமோவால் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

Advertising
>
Advertising

ticket to finale

பிக்பாஸ் வீட்டுக்குள் ticket to கிராண்ட் finale task-இன் 2-ஆம் ரவுண்டு போட்டி அரங்கேறியுள்ளது. இந்த டாஸ்க்கில் தான் தாமரை மற்றும் பிரியங்க இருவரும் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது போன்ற பரபரப்பான காட்சிகளை காண முடிந்தது.

முன்னதாக நடந்த  ticket to கிராண்ட் finale task முதல் ரவுண்டில் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு ரவுண்ட் டேபிளில் அமர்ந்து டின்னர் சாப்பிட்டுக்கொண்டே, ஏன் தங்களுக்கு அந்த டிக்கெட் வேண்டும்? ஏன் தாங்கள் குறிப்பிடும் ஒரு குறிப்பிட்ட போட்டியாளருக்கு இந்த டிக்கெட் வேண்டாம்? என்பது குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்தனர்.

முட்டிக்கொண்ட நிரூப் - பிரியங்கா

மிகவும் நாகரிகமான பார்ட்டி போல் மென்மையாக தொடங்கிய இந்த பேச்சு, போகப் போக சீரியஸாக மாறியது. இதில் நிரூப் மற்றும் பிரியங்கா இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு காரணம், பிரியங்கா சொன்ன கருத்துக்கு நிரூப் அதிருப்தி அடைந்ததுதான்.

முட்டைகளை உடைக்கும்/காப்பாற்றும் போட்டி

இந்நிலையில் தான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள், ticket to கிராண்ட் finale task-இன் 2-ஆம் ரவுண்டு தொடங்கியது. இதில் போட்டியாளர்களுக்கு முட்டைக் கூடுகள் கொடுக்கப்பட்டன. அதில் இருக்கும் முட்டைகளை மற்ற போட்டியாளர்கள் உடைக்க அனுமதி கொடுக்கப்படுகிறது.

அவ்வாறு மற்ற போட்டியாளர்களிடம் இருந்து முட்டைகளை உடையாமல் காப்பாற்றவும் ஒரு போட்டியாளர் முனையலாம். எனினும் எதிர் போட்டியாளர்களின் முட்டைகளை உடைத்தோ, எதிர் போட்டியாளர்களிடம் இருந்து தம் கூட்டில் இருக்கும் முட்டைகளை பாதுகாத்தோ, ஹவுஸ்மேட்ஸ் இந்த டாஸ்க்கை விளையாடும்போது உடல் பலத்தால் தான் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள முடியும்.

இப்படி இந்த டாஸ்க் முடிவில் எந்த 3 நபர்களின் முட்டைக் கூட்டில் முட்டைகள் அதிகம் உடைக்கப்பட்டிருக்கிறதோ, அந்த  போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்படுவார் என பிக்பாஸ் குறிப்பிட்டுள்ள அறிவிப்பினை, சிபி போட்டியாளர்களிடையே படித்து காண்பித்தார். இதில் தான் தாமரை மற்றும் பிரியங்கா இருவருக்கும் தள்ளு முள்ளு உருவாகிறது. 

தாக்கிக்கொண்ட தாமரை - பிரியங்கா

இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது போலான காட்சிகள் புரோமோவில் வெளியாகியதுமே அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

அதன் பின்னர் தாமரை அழுதபடி படுத்திருக்கும் காட்சிகளையும், பாவனியிடம் பிரியங்கா, “என்னை தாக்கினால், நான் திருப்பி தாக்குவேன், நான் என்ன இளிச்ச வாயா? அவளுக்காக நான் எவ்ளோ முறை நின்றிருக்கேன் தெரியுமா?” என கூறும் காட்சிகளையும் காண முடியும்.

ஆனால், உண்மையில் கூட்டில் இருக்கும் முட்டையை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டும், எதிர் போட்டியாளரின் முட்டையை உடைக்கும் பொருட்டும் இருவருக்கும் இடையே உருவான இந்த தள்ளுமுள்ளு தான் இருவரும் தாக்கிக் கொள்வதாக தெரிகிறது. 

Also Read: "Emotional-ஆ நான் இத அனுபவிக்கணும்னு நெனைக்கிறீங்க?".. பிரியங்காவை Nominate செய்த சஞ்சீவ்!

தொடர்புடைய இணைப்புகள்

Thamarai priyanka attacked each other biggboss5 tamil vijay tv

People looking for online information on தாமரை செல்வி, பிக்பாஸ், பிரியங்கா, BiggBoss5, BiggBossSeason5, Biggbosstamil, BiggBossTamil5, BiggBossTamilPromo, Eviction, Nomination, Priyanka angry, Thamarai priyanka assault, Thamarai priyanka fight, Thamarai selvi angry, VijayTelevision, Vijaytv will find this news story useful.