‘தாமரை த்தூ.. ச்சீ.. உனக்கு வக்கு இல்ல’... ‘பிரியங்கா நீயெல்லாம் ஒரு பொம்பளையா ?’.. அனல் பறந்த BIGGBOSS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossTamil5: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 84 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.  இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் போட்டியாளர்கள் தங்களை இறுதிப்போட்டிக்காக தயார் படுத்திக் கொண்டு வருகின்றனர்.

Advertising
>
Advertising

டிக்கெட் டூ ஃபினாலே 2

அதன் பொருட்டு முன்னதாக டிக்கெட் டூ ஃபினாலே என்று சொல்லக் கூடிய ரவுண்ட்டை பிக்பாஸ் அறுவுறுத்தினார். ஃபினாலேவுக்கு போகும் வரை நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் ஒரு கோல்டன் டிக்கெட்டான இந்த டிக்கெட்டை பெறுவதற்காக போட்டியாளர்களுக்கு தினம் தினம் புது புது டாஸ்க்குகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் போட்டியாளர்கள் சிலர் தங்களுக்கென கொடுக்கப்பட்ட முட்டைக் கூடுகளில் இருக்கும் முட்டைகளை பாதுகாத்தும், அடுத்தவர் முட்டையை உடைத்தும் விளையாட வேண்டும் என்கிற டாஸ்க் அறிவிக்கப்பட்டது. இதில் உடல் வலிமை உடையவர்களின் கை மேலோங்கி இருக்கதான் செய்கிறது.

அமீரை எதுக்கு கூப்டுற?

இதில் தான், தாமரையின் முட்டைகளை அமீர் உடைக்க வருகிறார். அதுவரை அமீரின் முட்டைகளை பிரியங்கா பாதுகாத்தார்.  பின்னர் பிரியங்காவின் கூட்டில் உள்ள முட்டைகளை தாமரை எய்ம் செய்கிறார்.

அப்போது பிரியங்கா அமீரை அழைக்க, “அமீரை எதுக்கு கூப்டுற?” என்று தாமரை கேட்டுவிட, உடனே கோபம் வந்த பிரியங்கா, “அமீரை எதுக்கு கூப்டுறேனா?? நான் யார வேணா கூப்டுவேன்.. நீ ஏன் கேக்குற?  நீ பண்ணதெல்லாம் எனக்கு தெரியும். தெரியாதுனு நெனைக்காத..’ என்று கூறினார்.

நான் மட்டும் எதிர்த்து பேசுறேன்னு உனக்கு ஆதங்கம்

பின்னர் பேசிய தாமரை, “எல்லாரும்.. நீ பண்றதையெல்லம் பாத்துக்கிட்டு பேசாம இருக்காங்க. நான் மட்டும் உன்னை எதிர்த்து பேசுறேன்னு உனக்கு ஆதங்கம்..” என்று குறிப்பிட, பதிலுக்கு பிரியங்கா, “உனக்கு வக்கு இல்ல.. எல்லா இடத்துலயும் உனக்காக நான் நின்னு, திட்டு வாங்கினேன்.. ஆனா இவ (தாமரை) என்கிட்டயே சண்டைக்கு வர்றா.. திரும்ப.. திரும்ப..” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

பின்னர் இருவரும் அமைதியாகிவிட, பிரியங்கா தன் பக்க கருத்தை சொல்லி புலம்பிக்கொண்டு இருக்க, அதற்கு தாமரை, “இப்ப என்ன பண்ணனும்? முட்டையை உடைக்கலாம்ல?” என்று சொல்லி பிரியங்காவின் முட்டையை உடைக்க வர, அதை பிரியங்கா தாமரையை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு தடுத்துக் கொண்டிருந்தார்.

இப்ப நீ என்ன பண்ண? பிக்பாஸ் இவ என்ன Hit பண்றா!

அப்போது தாமரை, “என்ன தள்ளிவிடுற? நானும்  தள்ளுவேன்” என சொல்லி, பிரியங்காவை Hit பண்ணுமாறு தள்ளிவிட, டென்ஷனான பிரியங்கா, “இப்ப என்ன பண்ண? இப்ப நீ என்ன பண்ண? பிக்பாஸ் இவ என்ன Hit பண்றா.. நான் கேம்க்காக பிடித்து தள்ளிவிட்டால், இவ எப்படி எனக்கு பண்ணலாம்?” என கத்தியதுடன் சக போட்டியாளர்களிடம் கேட்டார்.

நீ ஏன் காண்டு ஏத்துற?

பின்னர் தாமரையோ பிரியங்காவிடம், “அப்போ நான் சும்மாதானே உக்காந்துட்டு இருந்தேன். நீ ஏன் காண்டு ஏத்துற மாதிரி பண்ணிட்டு இருந்த?” என கேட்டார். பின்னர் பிரியங்கா அழுதேவிட்டார்.

அவரை ராஜூ கட்டிப்பித்து தேற்றி சமாதானப் படுத்தினார். இந்த டாஸ்க்கின் இறுதியில் பாவனி மற்றும் தாமரை இருவரின் கூடையிலும் இருந்த அனைத்து முட்டைகளும் உடைக்கப்பட்டுவிட்டதால் இருவரும் இந்த டிக்கெட் to ஃபினாலேவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Also Read: "சொல்லு.. சொல்லு"... குக் வித் கோமாளி சீசன் 3.. சும்மா கலர்ஃபுல்லா வெளியான தெறி ப்ரோமோ!

தொடர்புடைய இணைப்புகள்

Thamarai Priyanka aggressive fight assault biggboss5

People looking for online information on Assault biggboss5, Biggboss finale, BiggBoss5, Biggboss5 tamil, Biggbosstamil, BiggBossTamil5, Cook with comali 3, Thamarai assault priyanka, Thamarai priyanka aggressive fight, Thamarai priyanka assault, Vijay tv will find this news story useful.