"பாயாசம் குடுக்காதது தப்பா? நான் கொடுத்தா குடிக்கமாட்டா".. புது பிரச்சனையால் புலம்பிய தாமரை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் சில போட்டியாளர்களிடம் தாமரை செல்விக்கு பிரச்சனைகள் வந்தன.

Advertising
>
Advertising

குறிப்பாக பாவனியுடனும், பிரியங்காவுடனும் தாமரைக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து, அவை முடிவை எட்டாமலேயே போயிருக்கின்றன. இதனிடையே அண்மையில் தாமரைக்கு அபினய்யுடன் பிரச்சனை வந்தது. இந்த விவகாரத்தின் போதும் கூட, பிரியங்கா, பாவனி மற்றும் அபினய்யுடன் இணைந்து தாமரை விமர்சித்தார்.

இந்நிலையில் தாமரை பாயாசம் செய்து அனைவருக்கும் கொடுத்தார். எனினும் பாவனிக்கு அவர் பாயாசம் கொடுக்கவில்லை. இதனை கவனித்த ராஜூ, பாவனிக்கு மட்டும் பாயாசம் கொடுக்காமல் போவது ஏன்? அவளுக்கு மட்டும் தனியாக கொடுக்க போவதில்லை. ஆனால் எல்லாருக்கும் பாயாசம் கொடுக்கும்போது பாவனிக்கும் மட்டு பாயாசம் கொடுக்கலன்னா அது தப்பு இல்லையா? என தாமரையை அழைத்து ராஜூ முகத்துக்கு நேராக கேட்டுவிட்டார்.

இதனை அடுத்து இந்த வாக்குவாத குறித்து பேசிய அமீர், தாமரையிடம் இந்த பாயாச விவகாரம் குறித்து, அவரிடம் ராஜூ கேட்காமல் வேற யாராவது கேட்டிருந்தாலே பிரச்சனை தான் வெடித்திருக்கும் என்று சொன்ன அமீர், “ஒவ்வொருத்தர்க்கும் ஒவ்வொருவர் தேவைப்படுறவங்க என இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து பாவனியிடம் பேசிய பிரியங்கா, தாமரை சமைத்து நீ சாப்பிட வேண்டாம் என்று நினைத்தால், சரி, இது நிரூப் சமைத்தது, போய் சாப்பிடு என மோட்டிவேட் செய்ய பாவனி சிட்டாய் பறந்து சென்றார். பின்னர் ராஜூ உள்ளிட்டோரிடம் பேசிய தாமரை, பாவனி தான் கொடுப்பதை சாப்பிட மாட்டாள் என்று சொன்னேனே இப்போது பாருங்கள் என்று கூறினார்.

முன்னதாக இந்த குறிப்பிட்ட விஷயத்தில் தாமரைக்கு சப்போர்ட் செய்த சிபி, அத்தனை பேருக்கும் நினைவு வைத்துக்கொண்டு பெரிதாக யாருடைய உதவியும் இன்றி சமைத்துவிட்டு, அவர்கள் ஒவ்வொருவரையும் சென்று அழைத்து வரவும் வேண்டும் என்றால் அது சரியல்ல! என குறிப்பிட்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

Thamarai felt sad after raju told her to treat pavani biggboss

People looking for online information on BiggBoss5, BiggBossTamil5, Ciby, Raju, Thamarai pavani fight, Thamarai priyanka, Thamarai Selvi, Trending, Vijay Television, Vijay tv will find this news story useful.