"இதுனால தான் BIGGBOSS போகணும்ன்னு அவரு ஆசைபட்டாரு".. போறதுக்கு முன்னாடி தாமரைக்கு PHONE செஞ்ச GP முத்து!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்து சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

அதே போல, பிக்பாஸ் வீட்டில் வாரத்திற்கு ஒரு டாஸ்க் அரங்கேறி வருவதால் ஏராளமான பஞ்சாயத்தும் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.

மேலும் இந்த சீசன் தற்போது 50 நாட்களை எட்டி உள்ள நிலையில், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் விளையாடி வரும் விதமும் டாஸ்க்கின் அடிப்படையில் சற்று மாறிக் கொண்டே இருப்பதாகவும் பார்வையாளர்கள் கருதி வருகின்றனர்.

அதே வேளையில் என்ன டாஸ்க் வந்தாலும், தாங்கள் பாதுகாப்பாக அடுத்தடுத்த வாரங்களில் தொடர்ந்து தங்களை பிக்பாஸ் வீட்டில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சிலர் விளையாடி வருகின்றனர். சமீபத்தில் நீதிமன்ற டாஸ்க் முடிவடைந்திருந்த நிலையில், வார இறுதியில் தோன்றிய கமல்ஹாசன், போட்டியாளர்கள் நீதிமன்ற டாஸ்க்கில் Safe ஆக விளையாடியதை குறிப்பிட்டு சில கருத்துக்களையும் முன் வைத்திருந்தார்.

அடுத்தடுத்து வாரங்களில், யார் யார் எல்லாம் பிக்பாஸ் வீட்டில் தங்களை தக்க வைத்து கொள்ள போகிறார்கள் என்பது அடுத்தடுத்த டாஸ்க்குகளில் அவர்கள் செயல்படும் விதத்தில் தான் இருக்கிறது என்றும் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, முதல் இரண்டு வாரங்கள் சிறந்த போட்டியாளராக வலம் வந்த ஜிபி முத்து, தனது மகன் மற்றும் குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என தானாக முன் வந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இந்த நிலையில், கடந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக வந்த தாமரை, தற்போது ஜிபி முத்து குறித்து பேசியுள்ள விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது. சமீபத்தில் Behindwoods டிவி சேனலுக்கு தனது கணவருடன் சேர்ந்து பிரத்யேக பேட்டி ஒன்றை தாமரை அளித்திருந்தார்.

அதில், தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் 6 வது சீசன் குறித்து பேசும் தாமரை, "நாங்க எல்லாம் 40 நாள் கழிச்சு தான் சண்டை போடவே ஆரம்பிச்சோம் ஆனா இப்போ இரண்டாவது நாளிலேயே சண்டை போட ஆரம்பிச்சுட்டதா கேள்விப்பட்டேன்" என்றார்.

அதே போல இந்த சீசனில் முதல் இரண்டு வாரங்கள் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்து ஜி பி முத்து குறித்து பேசிய தாமரை, "பாவம்ங்க அவரு. பிக்பாஸ் போவதற்கு முன்பு எனக்கு ஜிபி முத்து அழைத்து பேசியிருந்தார். உங்களைப் பார்த்து தான் பிக்பாஸ் போக ஆசை வந்தது என கூறினார். அண்ணே சமாளிச்சுருவீங்களான்னு கேட்டேன். அப்படி இப்படி நடக்கும்ன்னு சொன்னேன்" என தாமரை தெரிவித்தார்.

அதே போல முந்தைய சீசன் போட்டியாளர்கள் குறித்தும், தான் யார் யாருடன் நட்பில் உள்ளார் என்பது குறித்தும் பல விஷயங்களை தாமரை இந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். முந்தைய சீசனில் போட்டியாளராக இருந்த ஐக்கி பெர்ரி தனக்கு உதவியது குறித்தும் நெகிழ்ச்சியாக சில கருத்துக்களை தாமரை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்திருந்தார்.

"இதுனால தான் BIGGBOSS போகணும்ன்னு அவரு ஆசைபட்டாரு".. போறதுக்கு முன்னாடி தாமரைக்கு PHONE செஞ்ச GP முத்து!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thamarai about gp muthu phone convo before enter biggboss

People looking for online information on Bigg Boss Tamil, GP MUTHU, Thamarai will find this news story useful.