5 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களுடன் சந்திப்பு.. மாஸ் எண்ட்ரி கொடுத்த விஜய்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர் விஜய், அண்மையில்தான் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர் உள்ளிட்டோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Thalapathy Vijay Meet Fans after 5 years amid varisu
Advertising
>
Advertising

இந்நிலையில் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய், தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.  இதற்கென பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸீ ஆனந்த்  உடனிருந்தார்.

Thalapathy Vijay Meet Fans after 5 years amid varisu

இதனை தொடர்ந்து நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். மேலும், அடுத்தடுத்த வாரங்களில், நடிகர் விஜய் பிற மாவட்ட ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவிருப்பதாக தெரிகிறது. தொடர்ச்சியாக பீஸ்ட் பட வெளியீட்டுக்கு பிறகு, தற்போது வாரிசு படத்தில் நடித்துள்ள விஜய், நீண்ட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கின்றார்.

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி பைடிபல்லி இயக்கும் 'வாரிசு' படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.தமன் இசையில் அண்மையில் விஜய், ரஷ்மிகா நடித்து வெளியான இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடல் ஹிட் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Meet Fans after 5 years amid varisu

People looking for online information on Varisu, Vijay, Vijay Meet Fans will find this news story useful.