சாலை விபத்தில் சின்னத்திரை நடிகைகள் பலி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடரில் நடிப்பதற்காக சென்ற இரண்டு நடிகைகள் சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கில் சின்னத்திரை தொடர்களில் நடிப்பதன் மூலம் பரவலாக அறியப்படுபவர்கள் பார்கவி மற்றும் அனுஷா.

இவர்கள் ஒரு சின்னத்திரை தொடரின் படப்பிடிப்புக்காக தெலங்கானா மாநிலம் அனந்தகிரி காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் படப்பிடிப்பு முடிந்து நேற்று காலை ஹைதராபாத்திற்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது அப்பாரெட்டிகுடா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் இருந்து ஒரு லாரி வேகமாக வந்ததுள்ளது. லாரியில் மோதுவதை தவிர்க்க டிரைவர் காரை திருப்பியுள்ளார்.  அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பார்கவி சம்பவ இடத்திலேயே பலியாகினார். காயம் அடைந்த அனுஷா, சக்ரி, வினய் ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அங்கு அனுஷா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.  இந்த சம்பவம் தெலுங்கு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Telugu Actress Bargavi and Anusha died car Accident in Telangana

People looking for online information on Anusha, Bargavi, Road Accident will find this news story useful.