60S KIDS-ன் ஜேம்ஸ் பாண்ட்.. தென்னிந்திய COWBOY.. ஜெய்ஷங்கரின் மகன்.. 'பாக்கியலட்சுமி' சீரியலில் எண்ட்ரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், மிக அண்மையில் ஒளிபரப்பாக தொடங்கி, மிக விரைவில் மக்களிடையே பிரபலமான சீரியலாக, பாக்கியலட்சுமி சீரியல் இருக்கிறது.

இந்த பாக்கியலட்சுமி சீரியல், விஜய் டிவியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியல் தற்போது இல்லத்தரசிகளுக்கு ஆல்டைம் ஃபேவரைட் சீரியலாகவே மாறி இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

இந்த சீரியலில் வரும் கதாநாயகி பாக்கியலட்சுமி. இவரை மையப்படுத்தி தான் இந்த சீரியலின் கதை நகர்கிறது. சரியாக படிக்காத, இந்த குடும்பத்தலைவி பாக்கியலட்சுமி, தன் குடும்ப உறுப்பினர்களுக்காக சின்ன சின்ன விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை பலவற்றையும் தியாகம் செய்கிறார்.  அதனால் தொடர்ந்து கஷ்டப்படுகிறார். சில அவமானங்களையும் தாங்கிக் கொள்கிறார்.

ஆனால் இவருக்கு சில திறமைகளும் ஆர்வமும் இருக்கின்றன. அதை யாரும் கவனிப்பதில்லை. இவருடைய கஷ்ட - நஷ்டங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. இவருக்கு உரிய அங்கீகாரம் சரிவர கிடைப்பதில்லை. அதனால்தான் இந்த கேரக்டர் முக்கியமான கேரக்டராக மாறுகிறது. பல இல்லத்தரசிகள் இப்படி இன்றும் இருக்கிற சூழல் இருக்கிறது. எனவே அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் பொருட்டு, இந்த கேரக்டர் திகழ்கிறது.

இப்படி குடும்பத்துக்குள்ளேயே சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கும் பல இல்லத்தரசிகளின் ஒற்றைக் கனவாக வருபவர்தான் பாக்கியலட்சுமி. இவருடைய கணவனாக கோபி என்கிற பெயரில் சதீஷ் நடிக்கிறார். தோளுக்கு மேல் வளர்ந்த 3 பிள்ளைகள், ஒரு மருமகள், மாமனார் மற்றும் மாமியார் என அனைவரையும் இவர் தனி ஒரு ஆளாக கவனித்துக் கொண்டு சுய தொழில் செய்வதற்கு முயற்சி செய்து போராடி வருவதாக தற்போது காட்சிகள் சென்று கொண்டிருக்கின்றன.

இவருக்கு இத்தனைக்கும் நடுவில் உறுதுணையாக இருப்பது அவருடைய மகன் எழில் தான். மற்றவர்கள் எல்லாம் இவரைப் பார்த்து ஏளனமாக பேசுவதும், கிண்டல் செய்வதும், எள்ளி நகையாடுவதும் என இருக்கின்றனர். ஒவ்வொருவரும் பாக்கியாவை ஏளனப்படுத்தி, அவமானப்படுத்தும் காலம், இறுதியில் பாக்கியாவை எப்படியாவது ஜெயிக்க வைத்து, அனைவரின் முகத்திலும் கரியைப் பூச வைக்கிறது.

இப்படித்தான் இந்த சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமியின் கணவராக - அதாவது கோபி கேரக்டர், ராதிகா என்கிற பெண்ணுடன் முறைதவறி பழக, இரண்டு குடும்பத்தையும் கோபி, சமாளிக்க முயற்சிக்கிறார். குறிப்பாக ராதிகாவையும் பாக்கியாவையும் சந்திப்பதற்கு விடாமல் தடுத்துக் கொண்டே இருந்தார். ஆனால் இருவரும் அவ்வப்போது சந்தித்து அறிமுகமாகி விட்டனர்.

இதனிடையே ராதிகாவுடன் பழகுவதற்கு ஒரு நியாயம் உருவாக வேண்டும் என்பதால், கோபி எப்போதும் பாக்கியாவை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார். பாக்கியலட்சுமிக்கோ, கோபி இப்படி ஒரு சதி செய்வதே தெரியாது. ஆனால் கோபிக்கு உதவுவதற்காக மிகப் பெரிய தொழிலதிபர் தந்த சமையல் ஆர்டர் ஒன்றை கையில் எடுத்தார் பாக்கியலட்சுமி.

இந்த தொழிலதிபர் ராஜசேகர் எனும் கதாபாத்திரம் வேறு யாருமல்ல, பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் மகன்தான். நடிகர் ஜெய்சங்கர் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் முக்கியமான ஹீரோவாக விளங்கியவர். அண்மைக்காலங்களிலும் நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கர் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் 80களில் இருந்து நடித்திருக்கிறார்.

குறிப்பாக ரஜினியுடன் முரட்டுக்காளை, தளபதி உள்ளிட்ட திரைப்படங்களில் ஜெய்சங்கர் நடித்திருப்பார் . சில திரைப்படங்களில் வில்லனாகவும் ஜெய்சங்கர் மிரட்டியிருக்கிறார்.

முன்னதாக ஜெய்சங்கர் டிடெக்டிவ் படங்களிலும் நடித்திருக்கிறார். இதனாலேயே இவர் ‘தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட்’ என்று அழைக்கப்படுவது உண்டு. இதேபோல் வெளிநாட்டுப் படங்களில் மட்டுமே காண முடிந்த கௌபாய் திரைப்படங்கள் தமிழில் வந்தாலும், தென்னிந்திய அளவில் ஜெய்சங்கர் நடித்த கௌபாய் திரைப்படங்கள்தான் நினைவில் பதிந்தன. இதனால் கௌபாய் திரைப்படங்கள் என்றாலே ஜெய்சங்கர் என்னும் அளவுக்கு பலருக்கும் நினைவில் பதிவாகிவிட்டது.

சில வருடம் முன்பு சிம்புதேவன் இயக்கத்தில் லாரன்ஸ் நடித்து வெளியான, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ திரைப்படத்தினை கூட, கௌபாய்களை மையப்படுத்தி எடுத்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் கௌபாய் கூட்டம் வசிக்கும் ஒரு இடத்துக்கு ஜெய்சங்கர்புரம் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும். அந்த அளவுக்கு ஜெய்சங்கருக்கும் கௌபாய்க்கும் தொடர்பு இருக்கிறது. எனவே ஜெய்சங்கர் தென்னிந்தியாவின் கௌபாய் என்று ரசிகர்கள் அளவில் அழைக்கப்படுகிறார்.

இப்படி தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட், தென்னிந்தியாவின் கௌபாய் என பல அடையாளங்களை சுமந்திருக்கும் ஜெய்சங்கர் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தவிர, பட்டணத்தில் பூதம் உள்ளிட்ட சில காமெடி திரைப்படங்களிலும் ஜெய்சங்கர் நடித்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள். இவருடைய ஒரு மகன் விஜய் சங்கர் மருத்துவராக பிரபலமானவர். இன்னொரு மகன் சஞ்சய் சங்கர். இந்த சஞ்சய் சங்கர் தான் இப்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். இதையடுத்து அவர் பாக்கியலட்சுமி சீரியலில் தொழிலதிபர் ராஜசேகர் எனும் கேரக்டரில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இவருடைய வருகைக்கு பின்பு பாக்கியலட்சுமி கதைக்களம் இன்னும் சூடு பிடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பதுடன், இந்த சீரியலின் ரசிகர்களான 60S மற்றும் 70S Kids, இவர் ஜெய்ஷங்கர் மகன் என்பதால் இன்னும் குஷியாகிவிட்டனர்.

Also Read: இது எப்ப? திடீர்னு வைரல் ஆகும் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட BGM.. பறக்கும் ரிங் டோன்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Tamil James Bond jai shankar son in Bakkiyalakshmi Serial

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi serial promo, Baakiyalakshmi serial today, VijayTelevision, Vijaytv will find this news story useful.