அடடே!! ‘லிங்குசாமி’ படத்துக்கு வில்லனாகும் பிரபல தமிழ்த் திரைப்பட ஹீரோ!!.. யார்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லிங்குசாமி கடைசியாக விஷாலை வைத்து “சண்டக்கோழி” படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து தமிழ், தெலுங்கில் பெயரிடப்படாத RAPO19 என அழைக்கப்படும் இந்த படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார்.

இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரின்ஸ் சார்பாக பிரவீன் குமார் தயாரிக்கிறார். ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக “உப்பனா” புகழ் நடிகை கீர்த்தி செட்டி நடிக்கிறார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை நவின் நூலி கையாள்கிறார். இரட்டையர்கள் அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்து இயக்குகின்றனர்.

இந்த படத்தின் வில்லன் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. அதை தற்போது படக்குழு சார்பாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

தமிழில் "மிருகம்", "ஈரம்", "மரகத நாணயம்" போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ஆதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

ஏற்கனவே இதே தயாரிப்பு நிறுவனத்திற்கு “யூ டர்ன்” படத்தில் நடிகர் ஆதி பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கதாபாத்திரத்திற்காக இப்போதே உடற்பயிற்சி செய்து தயாராகுவதாக டிவிட்டரில் நடிகர் ஆதி தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Tamil hero stand against telugu hero for new movie

People looking for online information on Eeram, Krithi Shetty, Lingusamy, Maragatha Naanayam, Ram Pothineni, Sandakozhi 2, Uppena will find this news story useful.