அதென்னப்பா சும்மா சுர்னு... சிவா பாட்டு எழுத சூர்யா ஆட வேற லெவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொங்கல் தின ஸ்பெஷலாக சூர்யா, பிரியங்கா மோகன் இணைந்து கலக்கலாக நடனம் ஆடும் சும்மா சுர்னு பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கி வருகிறது.

Advertising
>
Advertising

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதற்கும் துணிந்தவன்’. சூர்யாவின் 40வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.  இப்படத்தில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
படம் முன்னதாகவே முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா

இரண்டாம் கொரோனா அலை காரணமாக தள்ளிப்போனது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடி பகுதிகளில் நடைபெற்ற நிலையில், படத்தில் உள்ள இரண்டு பாடல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளிடப்பட்டன. இப்படத்தின் முதல் பாடலான 'வாடா தம்பி' ரசிகர் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே போன்று, 'உள்ளம் உருகுதய்யா' என்ற இரண்டாவது பாடலும் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

உள்ளம் உருகுதய்யா

முருகனை போற்றி பாடும்  பக்திப்பாடலான 'உள்ளம் உருகுதய்யா' பாடலின் தாக்கத்தில் இப்பாடல் உருவாகியுள்ளது. யுகபாரதியின் வரிகளில், பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீநிவாஸன், பிருந்தா மாணிக்கவாசகன் ஆகியோர்  இப்பாடலைப் பாடியுள்ளனர். முன்னதாக படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதுவதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக எதற்கும் துணிந்தவன் டைட்டில் கார்டில் பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

சிவகார்த்திகேயன்

பாண்டிராஜ் இறுதியாக இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் அந்த படத்திலும் 'காந்த கண்ணழகி' என்ற ஒரு பாடலை எழுதியிருந்த நிலையில் அதன் மூலம் சூர்யாவிற்கு பாடல் எழுதுவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. முன்னதாக கோலமாவு கோகிலா படத்தில் 'எனக்கு கல்யாண வயசுதான் வந்திருச்சு', ஆதித்யா வர்மா திரைப்படத்தில் ஒரு பாடல் , இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படத்தில் , செல்லம்மா, ஓ பேபி என இரு பாடலை எழுதியிருந்தார்.

சும்மா சுர்னு

சூர்யா பிரியங்கா மோகன் இணைந்து கலக்கலாக நடனம் ஆடும் பாடலாக உருவாகியுள்ள சும்மா சுர்னு பாடல் துள்ளல் இசையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சிவகார்த்திகேயன் வரிகளுக்கு சூர்யா நடனமாடும் பாடல் இன்னும் ஷபெஷலாக அமைந்துள்ளது. கவித்துமான வரிகள் இல்லாமஸ் மிக எதார்த்த வரிகளில், அனைவரையும் கவரும் பாடலாக இருப்பதால், சூர்யாவின் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இணையத்தை ஆக்கிரமித்துள்ள சும்மா சுர்னு பாடல் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல தீனியாக அமைந்துள்ளது. சூர்யா ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடி வருகின்றனர். அதென்னப்பா சும்மா சுர்னு என்றும் நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். எனவே, பீஸ்ட் படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளதால் விஜய் - சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

Surya priyanka mohan etharkum thuninthavan 3rd single Release

People looking for online information on Etharkum Thuninthavan, Pandiraj, Priyanka Mohan, Sivakarthikeyan Lyrics, Summa Surnu Song, Sun pictures, Surya Movie will find this news story useful.