விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சூர்யா - காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘காப்பான்’ திரைப்படத்தில் விவசாயிகளின் நலனுக்காக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘காப்பான்’ திரைப்படத்தில் சூர்யா, மோகன் லால், சாயீஷா, சமுத்திக்கனி, ஆர்யா, போமன் இராணி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படம்  கடந்த செப்.20ம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் நேரில் சந்தித்தனர். பேராபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை அப்பட்டமாகப் படமாக்கி, விவசாயிகளின் புரட்சிக் குரலாக முழங்கி இருக்கும் நடிகர் சூர்யாவையும் இயக்குநர் கே.வி.ஆனந்தையும் விவசாயிகள் பாராட்டினர்.

கடைக்கோடி மக்களுக்கும் புரியும் விதமாக விவசாய பிரச்னைகளை உரத்துச் சொல்லி, பெரிய அளவிலான கார்பரேட் நிறுவனங்கள் பின்னுகிற சதி வலைகளை அம்பலப்படுத்தி காப்பான் படம் மிகப்பெரிய விவசாயப் புரட்சிக்கே வித்திட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயத்தைச் சூழும் ஆபத்துகளை எதிர்த்து தொடர்ந்து போராடும் தங்களுக்கு காப்பான் படம் மூலமாக மிகுந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் சூர்யா ஏற்படுத்தி இருப்பதாகவும், விவசாய சங்க நிர்வாகிகள் டெல்டா மாவட்டங்களைப் பார்வையிடவும் சூர்யாவுக்கு அழைப்பு விடுத்தனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Kaappaan Cauvery Farmers Association agriculture

People looking for online information on Agriculture, Farmers, Kaappaan, KV Anand, Suriya will find this news story useful.