என்னது பிக்பாஸ் SCRIPTED-ஆ.?? ''மீண்டும் வீட்டுக்குள் போனது ஏன்.?! - சுரேஷ் தாத்தாவின் அதிரடி பதில்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டி குறித்து அதில் கலந்து கொண்ட சுரேஷ் சக்ரவர்த்தி அதிரடி பதில்களை கொடுத்துள்ளார். 

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 தற்போது வெற்றிகரமான நிறைவடைந்துள்ளது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர். மேலும் டைட்டில் வின்னராக ஆரியும், ரன்னராக பாலாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் பிக்பாஸ்-ல் கலந்து கொண்ட சுரேஷ் சக்ரவர்த்தி இப்போட்டி குறித்து சுவாரஸ்யமான பதில்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பிக்பாஸ் போட்டி ஸ்கிரிட் அடிப்படையில் நடக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பிக்பாஸ்-ல் எந்த ஸ்கிரிப்ட்-ம் இல்லை. அந்தந்த சூழலுக்கு ஏற்ப நாங்கள் நடந்த கொண்டதே ஒளிபரப்பானது. 

மேலும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது குறித்து பேசிய அவர், ''முதலில் எனக்கு அழைப்பு வரவில்லை, அதனால் நானும் செல்லவில்லை. பிறகு ஃபைனல் போட்டி அன்று அழைப்பு வந்தது சென்றேன். அடுத்ததாக பிக்பாஸ் கொண்டாட்டம் இருக்கிறது. அதற்கும் அழைப்பு வந்தால் செல்வேன்'' என அவர் தெரிவித்தார். 

இதை தொடர்ந்து பிக்பாஸ் வின்னர் மற்றும் ரன்னர் ஆரி - பாலா குறித்து கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ''ஆரியை இனி நான் சப்போர்ட் செய்ய என்ன இருக்கிறது. பல கோடி மக்கள் வாக்களித்து அவர் வெற்றிபெற்றுள்ளார். அவரை வாழ்த்துவதை தவிர வேறென்ன உள்ளது. அதே போல பாலா மிக கடுமையான உழைப்பாளி. Self Determined.''என்று அவர் பதிலளித்துள்ளார். 

மேலும் பிக்பாஸ் போட்டி குறித்து பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட சுரேஷ் சக்ரவர்த்தியின் முழு வீடியோ தொகுப்பு. 

 

என்னது பிக்பாஸ் SCRIPTED-ஆ.?? ''மீண்டும் வீட்டுக்குள் போனது ஏன்.?! - சுரேஷ் தாத்தாவின் அதிரடி பதில்கள் வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சுரேஷ் சக்ரவர்த்தி அதிரடி பதில்கள் | suresh chakravarthy answers to fans questions about biggboss tamil 4

People looking for online information on Aari, Bala, BiggBoss Tamil 4, Suresh Chakravarthy will find this news story useful.