சனம் ஷெட்டியிடம் அநாகரிகமாக பேசிய சுரேஷ்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்... என்ன நடந்தது..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக்பாஸில் பல சர்ச்சைகள் வெடித்தன. அதிலொன்று ஆரம்பத்திலேயே சுரேஷ் மற்றும் சனம் இடையே ஏற்பட்ட வாக்குவாதம். சுரேஷ் பாத்ரூமில் இருக்கும் போது, வந்த சனம் ஷெட்டி, துணி துவைக்க உதவுகிறேன்  கொடுங்கள் என்று கேட்க, சுரேஷ் அவரை ஒதுக்குவது போன்று பேசி விட்டு நகர்ந்தார். இந்நிலையில் பின்பு பாலாஜி மற்றும் இளம் வயது போட்டியாளர்களிடம் அதைப் பற்றி புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் சனம் கூறியதை கேப்ரியல்லா சுரேஷிடம் வந்து பத்தவைக்க, பின்பு பெரிய சண்டை மூண்டது. அப்பொழுது தேவையில்லாத வார்த்தைகள் பலவற்றை சுரேஷ் சர்வ சாதாரணமாக பேசினார்.  இது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் கூறுகையில் "என்னிடம் இப்படி வைத்துக் கொள்ளாதே வகுந்துவிடுவேன்" என்று அநாகரிகமாக கூறினார். ஒரு பெண்ணை பார்த்து அவர் எப்படி இவ்வாறு கூறலாம் என்று சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Suresh abuses sanam shetty in biggboss சனம் ஷெட்டியிடம் அநாகரிகமாக பேசிய சுரேஷ்

People looking for online information on Biggboss, Sanam Shetty, Suresh will find this news story useful.