செம ! பிரதமர் மோடியுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2019 ஆம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டில்லியில்   (25.10.2021) அன்று நடைபெற்றது.

Advertising
>
Advertising

துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு விழாவுக்கு தலைமை தாங்கி திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கினார். மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். இதில் தமிழகத்தை சார்ந்த பல சினிமா கலைஞர்கள் விருது பெற்றனர். இந்திய அரசின் உயரிய  சினிமாத்துறை விருதான,  தாதா சாகேப் பால்கே விருதினை சூப்பர்ஸ்டார் நடிகர் திரு. ரஜினிகாந்த் வென்றார். 

தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குனர் பாலச்சந்தர் மட்டுமே இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை தமிழ் சினிமாவில் பெற்றவர்கள்,  இவர்களை தொடர்ந்து மூன்றாவது நபராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விருதை பெற்றுள்ளார். 

இந்நிலையில் விருதை பெற்றதும், மரியாதை நிமித்தமாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பில் ரஜினியுடன் அவர் மனைவி லதா உடனிருந்தார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு நவம்பர் 4 அன்று வெளியாக உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Superstar rajinikanth meets President & Prime Minister

People looking for online information on Narendra Modi, Rajinikanth will find this news story useful.