சுந்தர் சி உடன் மீண்டும் இணையும் ஜெய்... வில்லன் இவருதான்... புதிய படம் பற்றிய அதிரடி தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் சினிமா துறை தனது வழக்கமான பணியை தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது அந்த வகையில் சுந்தர் சி மற்றும் ஜெய் இணையும் அடுத்த படம் பற்றிய ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம் இயக்குனர் பத்ரி இயக்கத்தில் ஜனவரி 15 முதல் துவங்க உள்ளது. ஜெய் வில்லனாக நடிக்கும் மேலும் இந்த படத்தை அவ்னி மூவிஸ் தயாரிக்க உள்ளனர்.

ஏற்கனவே இவர்கள் இது ஏற்கனவே சுந்தர் சி மற்றும் ஜெய் கலகலப்பு 2 படத்தில் இணைந்து வேலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சுந்தர் சி இயக்கிய கலகலப்பு படத்தின் தொடர்ச்சி என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். கடைசியாக சுந்தர் சி 'இருட்டு' படத்தில் நடித்திருந்தார். மேலும் தனது அரண்மனை 3 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆர்யா, ஹன்சிகா, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளனர்.

அதேபோல் ஜெய் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 'கேப்மாரி' படத்தில் கடைசியாக நடித்திருந்தார். மேலும் ஹாட்ஸ்டாரில் வெளியான Triples வெப் சீரிஸில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் இந்த புதிய படம் பற்றிய அதிகாரபூர்வ தகவல் சீக்கிரமே வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Tags : Sundar C, Jai

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sundar c to team up with jai again சுந்தர் சி உடன் இணையும் ஜெய்

People looking for online information on Jai, Sundar C will find this news story useful.