"கர்ணன் இறக்கும்போது கிருஷ்ணன் அழுதான் - பாரதம்.. கிருஷ்ணன் தான் இறக்கிறான்!".. இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கர்ணன்.

திரையரங்குகளில் நேரடியாக வெளியாகி ஒளிபரப்பாகி வரும் கர்ணன் திரைப்படத்திற்கு பல்வேறு வகையான கருத்துக்கள் விமர்சனங்கள் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கலைப்புலி தாணு தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ், ரெஜிஷா விஜயன், நட்டி நடராஜ், யோகிபாபு, லால், கௌரி கிஷன் மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள கர்ணன் திரைப்படத்தை பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படமாக இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் தனுஷ் கர்ணன் என்கிற பெயரிலும் இந்த படத்தில் வில்லனாக வரும் நட்டி நடராஜ் கண்ணபிரான் என்கிற பெயரிலும் வருகிறார்கள். இதேபோல் படத்தில் இருக்கும் பலரும் துரியோதனன், அபிமன்யு என்கிற பல்வேறு விதமான மகாபாரத கேரக்டர்களின் பெயர்களில் வருகிறார்கள்.

இந்நிலையில் இதனை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் திருடா திருடி, சீடன் உள்ளிட்ட படங்களின் இயக்குநரும் நடிகர் தனுஷின் ரசிகர் மன்றத் தலைவருமான சுப்பிரமணியம் சிவா, “கர்ணன் இறக்கும் போது கிருஷ்ணன் அழுதான் - பாரதம்.. கிருஷ்ணன் தான் இறக்கிறான்.. கர்ணன் கொண்டாட படுகிறான்.. கிருஷ்ணன் கடவுள் தான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ: "ஆத்தோவ்.. அண்ணோவ்.. திட்டாதீங்கப்பா.. முடியல!" .. கதறும் 'கர்ணன்' கண்ணபிரான்!

தொடர்புடைய இணைப்புகள்

Subaramaniam Siva Viral Tweet Over Karnan and Kannabiran

People looking for online information on Dhanush, Karnan, Karnan Tamil, Mari Selvaraj, Natty Natraj, Santhosh Narayanan, Subramaniam siva will find this news story useful.