''போடா போடி இசையமைப்பாளருக்கு ஆண் குழந்தை பிறந்தது - அப்பன் மவனே வாடா !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்யராஜ் இயக்கத்தில் பிருத்வி ராஜ் ஹீரோவாக நடித்திருந்த 'பாரிஜாதம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் தரண் குமார்.  அந்த படத்தில் இடம் பெற்ற 'உன்னைக் கண்டேனே' பாடல் இன்றளவும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

அதனைத் தொடர்ந்து 'லாடம்', 'சித்து +2' போன்ற படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வந்தன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்த 'போடா போடி' திரைப்படத்தில் அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் மாபெரும் வரவேற்பை பெற்றன.

தொடர்ந்து 'ஆஹா கல்யாணம்', 'நாய்கள் ஜாக்கிரதை', 'நட்புனா என்னனு தெரியுமா?', 'பப்பி' என அவரது இசையில் பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இசையமைப்பாளர் தரண் குமாருக்கும் , தீக்ஷிதா மாணிக்கம் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில் இத்தம்பதியினருக்கு கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளனராம். 'போடா போடி' படத்தில் தரண் இசையில் வாலி எழுதிய அப்பன் மவனே வாடா என்ற பாடல்  ஒரு அப்பா தன் மகனை கொண்டாடும் பாடலாக அமைந்திருக்கும். அந்த பாடல் இப்பொழுது இசையமைப்பாளர் தரண் குமாருக்கு சரியாக பொருந்தும்.

இதன் ஒரு பகுதியாக பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி தம்பதிக்கு நேற்று (ஏப்ரல் 20) பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

STR's Poda Podi music director Dharan Kumar blessed with boy baby | போடா போடி இசையமைப்பாளர் தரண் குமாருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

People looking for online information on Aaha kalyanam, Dharan Kumar, Music Director, Poda Podi will find this news story useful.