கொரோனாவால் மரணமடைந்த திரையுலக பிரபலம் குறித்து நடிகர் சிம்பு உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான V.சுவாமிநாதன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை (10.08.2020) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தயாரிப்பாளர் சுவாமிநாதன் எனக்கு மிகவும் நெருக்கமானவர். மென்மையான மனிதர். புத்திசாலி. எந்த நேரத்தில் யாரை வைத்து என்ன மாதிரி படம் பண்ண வேண்டும் என்பதில் தெளிவானவர்.

நட்புக்கு இலக்கணமானவர். சிலம்பாட்டம் பட களத்தில் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர். இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்றது. எனது தேவைகளையறிந்து சகோதரனைப் போல் நடத்தி படப்பிடிப்பையும் முடித்து வந்தார்.

நிறைய நினைவலைகள் உள்ளன. ஆனால் இப்படியொரு சில நாட்களில் விடைபெற்று செல்வாரென தெரியாது. மருத்துவமனை சென்று பார்த்து ஆறுதல் கூட சொல்ல முடியாத ஒரு நோயோடு போராடியிருக்கிறார் என்பது வேதனைக்குரியது. அஸ்வின் மற்றும் அசோக் அவர்களும் என்றும் எந்த காலத்திலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், சுற்றத்திற்கும் திரையுலகினருக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மரணமடைந்த அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாறட்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

Tags : Str

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

STR Mourns loss of Producer V Swaminathan and shares an emotional note | பிரபல தயாரிப்பாளர் சுவாமிநாதன் மறைவிற்கு நடிகர் சிம்பு இரங்கல்

People looking for online information on Str will find this news story useful.