ஷாருக் மகன் மகன் கைதா?.. 2 பெண்கள் உட்பட 8 பேர்.. உல்லாச கப்பலில் பார்ட்டி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான். இவர் தான் நேற்றிரவு மும்மையில் கப்பலில் நடைபெற்ற பார்ட்டி விவகாரத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.

இந்த பார்ட்டியில் போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் வந்ததை அடுத்து போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது, 2 பெண்கள் உட்பட 8 பேர் பிடிபட்டனர். இதனிடையே இந்நிகழ்வில் கலந்த்கொண்டிருந்த ஷாருக் கான் மகன் ஆர்யன் கானிடம் அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ஷாருக் கான் - கவுரி கான் தம்பதியரின் முதல் மகன் ஆர்யன் கான். இவருக்கு சுகானா கான் என்ற தங்கையும், அப்ராம் என்ற தம்பியும் இருக்கிறார்கள். இவர் அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தார்.

கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்படம் லயன் கிங், இந்த படத்தின் இந்தி மொழி பதிப்புக்கு, சிம்பா என்ற கதாபாத்திரத்துக்கு ஆர்யன் கான் குரல் கொடுத்திருந்தார். அவரது குரல், அவரது தந்தையும் நடிகருமான ஷாருக் போலவே இருந்ததாக பலரும் கூறி வந்தனர்.

பின்னர் 2019ம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரின் போது, மைதானத்தில் இந்திய ஜெர்ஸி வண்ணத்தில் அணிந்திருந்த டி-ஷர்ட்டுடன், நடிகர் ஷாருக் கான், தன் மகன் ஆர்யனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்ததை அடுத்து அந்த புகைப்படம் வைரலானது.

ஷாருக் கானின் மகன், மகள் யாருக்குமே நடிப்பின் மீது ஆர்வமில்லாத நிலையில், ஆர்யன் கானுக்கு எழுத்து, இயக்கம், பாடுவது உள்ளிட்டவற்றின் மீதுதான் அதிக ஆர்வம் இருப்பதாக ஷாருக் கான் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அவ்வகையில் திரை நட்சத்திரமாக பெரிதாக தலைகாட்டாத ஆர்யன் கான், அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஹிருதிக் ரோஷன் ஆகியோர் நடித்த கபி குஷி கபி கம் என்கிற குடும்ப டிராமா திரைப்படத்தில் சிறு வயது ஷாருக்காக நடித்திருந்தார்.

ஆம், இதில் அமிதாப்பின் மனைவியாக, அதாவது ஷாருக்கின் தாயாராக நடித்திருந்த ஜெயா பச்சன், தன் கையில் சிறு வயது ஷாருக் கானாக தூக்கி வைத்திருந்தது, வேறு யாரும் அல்ல ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானைத்தான். இவை தவிர பிரீத்தி ஜிந்தாவுடன் ஷாருக் நடித்திருந்த கபி அல்விதா நா கெஹ்னா என்ற இந்தி படத்திலும் ஆர்யன் கான் ஒரு சிறிய ரோலில் வந்திருக்கிறார்.

இந்நிலையில்தான் மும்பை கடல் பரப்பின் நடுவே ஒரு உல்லாசக் கப்பலில் நடந்த போதைப் பொருள் பார்ட்டி தொடர்பாக, விசாரிக்கப்பட்டு வந்த ஆர்யன் கான், இந்நிகழ்ச்சியில் விஐபியாக கலந்து கொள்ளவே, தான் இங்கு வந்ததாகவும், போதைப் பொருள் விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என்றும் ஆர்யன் கான் தெரிவித்ததாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் முதல் கட்டமாக மெடிக்கல் டெஸ்டுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. 

Also Read: அதிர்ச்சிக்குள்ளாக்கிய சமந்தா - சைதன்யா பிரிவு முடிவு.. முதல் முறை மனம் திறந்த நாகார்ஜூனா!

தொடர்புடைய இணைப்புகள்

SRK Son Aryan Khan Questioned By NCB in Drug Party Case

People looking for online information on Aryan Khan, NCB Drug Case, Party mumbai, Shah Rukh Khan, Shah Rukh Khan Son will find this news story useful.