தடுமாறிய இசை கலைஞர்... மேடையில் SPB செய்த செயல்.. பார்க்கும் போதே புல்லரிக்கிறதே...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் நேற்றைய தினம் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி நம்மை விட்டு இயற்கை எய்தியுள்ளார்.  தன்னிகரற்ற பாடகருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஒரு கச்சேரியில் SPB பங்கேற்ற போது, புல்லாங்குழல் இசை கலைஞர் ஒருவர் சற்றே தடுமாறி டியூனை விட்டுவிட்டார். அந்த நிலையில் இளைய நிலா பாடலை பாடிய அவர் அந்த பாடலை முடித்த உடன் இவ்வாறு கூறுகிறார் "சிலசமயம் இப்படி நடப்பது சகஜம் தான். ஆனால் அவர் மிகவும் வருத்தப்படுகிறார். எனக்காக இன்னும் ஒரு முறை அதை வாசீப்பீர்களா" என்று கேட்டு மீண்டும் அதே பாடலை பாடுகிறார். மக்களின் கரகோஷங்களுடன் அந்த இடமே ஆரவாரம் செய்கிறது.

தடுமாறிய இசை கலைஞர்... மேடையில் SPB செய்த செயல்.. பார்க்கும் போதே புல்லரிக்கிறதே...! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SPB's heartwarming gesture in a live concert மேடையில் SPB செய்த நெகிழ்ச்சி செயல்

People looking for online information on SP Balasubramaniam, SPB will find this news story useful.