பாடகர் SPB-யின் உடல்நிலை குறித்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்த அவரது மகன் எஸ்.பி.சரண்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி அவரது உடலில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், வென்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இசைஞானி இளையராஜா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அவர் நலம் பெற வேண்டி வீடியோ வெளியிட்டிருந்தனர். பாடகர் எஸ்பிபியின் மகன் எஸ்.பி.சரண் தினமும் தனது தந்தையின் உடல்நிலை குறித்து விளக்கமளித்து வந்தார்.

இந்நிலையில் எஸ்பிபியின் உடல்நிலை மேம்பட்டுள்ளதாகவும், வென்டிலேட்டர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள எஸ்.பி.சரண் , ''எஸ்பிபி தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், வென்டிலேட்டர் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானவை என்றும் தெரிவித்தார். மேலும் எஸ்பிபியின் உடல் நிலை சரியாக பிராத்திக்கும் ரசிகர்களுக்கு அவர் நன்றி'' தெரிவித்தார்.

பாடகர் SPB-யின் உடல்நிலை குறித்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்த அவரது மகன் எஸ்.பி.சரண் வீடியோ

SP Charan clarifies the rumour about SP Balasubrahmanyam's health condition | எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை பற்றிய வதந்திக்கு எஸ்பி சரண்

People looking for online information on SP Balasubrahmanyam, Sp charan will find this news story useful.