ரஜினிக்காக கடைசியாக பாட வந்த SPB.. அண்ணாத்த ரெக்கார்டிங்கில் எடுத்த போட்டோஸ் வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினியின் அண்ணாத்த படத்திற்காக கடைசியாக எஸ்.பி.பி பாடிய ரெக்கார்டிங் போட்டோஸ் வைரல் அடித்து வருகிறது. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவையும் வென்று, 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர்,  இன்று பிற்பகல் ஒரு மணியளவில் காலமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது எஸ்.பி.பி ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு பாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த போட்டோக்களை பகிர்ந்த கவிஞர் விவேகா தனது பதிவில், ''எனது இரண்டாவது பாடலான  'தாவணியே'' (வானத்தைப் போல)-ல் ஆரம்பித்த உறவு அவரது கடைசிப் பாடல் வரை தொடர்ந்தது... காற்று மண்டலமே உங்களைக் கைகூப்பித் தொழும்  எஸ்.பி.பி சார்! குரலரசன் திரு எஸ்.பி.பி அவர்களோடு அண்ணாத்த படத்தின் தொடக்கப் பாடல் பதிவில்...'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

எஸ்.பி.பியின் கடைசி பாடல் | SP Balasubrahmanyam's last song recording photos for rajini's annaatthe

People looking for online information on Annaatthe, Rajinikanth, SP Balasubrahmanyam, SPB, SPB Last Song will find this news story useful.