PHOTOS: காமாட்சி அம்மன் கோயிலில் பிரபல PS1 நடிகை.. நெற்றி நிறைய விபூதி பூசி வைரல் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | அம்மாவான சீரியல் நடிகை சந்திரா.. குழந்தையின் ஃபோட்டோவை வெளியிட்டு நெகிழ்ச்சி பதிவு!

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியானது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இது வரை தமிழகம் முழுவதும் 200+ கோடி ரூபாயை வசூலித்து பொன்னியின் செல்வன் சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் மட்டும் இதுவரை முந்நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. குறைந்த நாளில் 300+ கோடி ரூபாய் வசூலை பொன்னியின் செல்வன் படம் எட்டியது. பொன்னியின் செல்வன் படம் மூன்று வாரங்களில் உலகம் முழுவதும் 450+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது என படநிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மேலும்   நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த ஷோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். நெற்றி நிறைய திருநீறு பூசி புகைப்படங்களில் ஷோபிதா துலிபாலா காணப்படுகிறார்.

பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற வானதி கதாபாத்திரம், கொடும்பாளூர் இளவரசி ஆவார். குந்தவை நாச்சியாரின் தோழியும், அருள் மொழி வர்மனின் காதலியாகவும் வருபவர்.

ஷோபிதா துலிபாலா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். அனுராக் காஷ்யப்பின் த்ரில்லர் படமான ராமன் ராகவ் 2.0 (2016) இல் துலிபாலா அறிமுகமானார், மேலும் அவர் தெலுங்கு படங்களான கூடாச்சாரி (2018) மற்றும் மேஜர் (2022) மற்றும் மலையாளத் திரைப்படங்களான மூத்தோன் (2019) குருப் (2021) படத்திலும் நடித்துள்ளார்.

 

Also Read | STR நடிக்கும் 'பத்து தல' படத்தின் திருவிழா பாடல் காட்சி.. வைரலாகும் BTS ஃபோட்டோ!

Sobhita Dhulipala visit Kanchipuram Kamatchi Amman Temple

People looking for online information on Kanchipuram Kamatchi Amman Temple, Sobhita Dhulipala, Sobhita Dhulipala visit Kanchipuram Temple will find this news story useful.