காந்தாரா படம் பார்த்து கிளைமாக்ஸை புகழ்ந்த S.J. சூர்யா.. வைரல் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காந்தாரா படம் பார்த்த பிறகு நடிகர் எஸ் ஜே சூர்யா படம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

கன்னட மொழியில் உருவாகிய ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான காந்தாரா செப்டம்பர் 30 அன்று கன்னட மொழியில் வெளியானது.

காந்தாரா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நல்ல  விமர்சனங்களைப் பெற்றது. இதனால், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் படத்தின் வசூல் அதிகரித்தது.

கேஜிஎஃப் புகழ் ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள இந்தப் படம் சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது.

படத்தைப் பார்த்த திரைப்பட ஆர்வலர்கள் ரிஷப் ஷெட்டியின் (குறிப்பாக கிளைமாக்ஸில்) மற்றும் படத்தில் வரும் மண் சார்ந்த பாத்திரங்களின் அசாத்திய நடிப்பினை பாராட்டி வருகின்றனர்.

காந்தாராவில் பொல்லாதவன் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார் (விக்ரம் வேதா, ரஜினி முருகன், வலிமை, தேஜாவு), பிரமோத் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத்தின் (குரங்கு பொம்மை) இசை படத்தின் இன்னொரு பெரிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது. இதே தலைப்புடன் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டிலும்  வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தினை பார்த்த பிறகு நடிகர் எஸ் ஜே சூர்யா படம் குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். அதில், "வாவ் என்ன ஒரு அற்புதமான படம் 👌👌👌 கிளைமாக்ஸ் புல்லரித்தது & அதிலும் குறிப்பாக Post Action Block  கடவுள் எப்படி மக்களை அன்புடன் அரவணைப்பார் என்பதை காட்டிய தருணம் அற்புதமான உணர்வு. ரிஷப் ஷெட்டி & படக்குழுவுக்கு வாழ்த்துகள் 💐💐💐🙏 நண்பர்களே இந்த படத்தினை தவறவிடாதீர்கள்" என எஸ் ஜே சூர்யா ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sj Suryah watched Kantara Movie and Tweet about the film

People looking for online information on Kantara, S J Suryah will find this news story useful.