"மனசு வலியில 2 பேரும் PHONE-அ தொலைச்சுட்டாங்க!".. குஷி படத்துக்கு SJ சூர்யா சொன்ன இன்னொரு க்ளைமாக்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆகும் நோக்கத்தில் திரைத்துறைக்கு வந்தாலும் கூட உதவி இயக்குநராக மாறி பின்னர் இயக்குநராக பல வெற்றி படங்களை கொடுத்து பின்னர் தான் நடிக்கும் படங்களை தானே இயக்கியது என பல அரிய முயற்சிகளை செய்து அனைத்திலும் வெற்றி கண்ட நடிகர், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா.

இன்றைய திரை உலகில் முன்னணி மெகா ஸ்டார்களாக இருக்கும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிப்பில் வாலி திரைப்படத்தையும்,  இதேபோல் தளபதி விஜய் நடிப்பில் குஷி திரைப்படத்தையும் இயக்கியவர் என்கிற பெருமை எஸ்.ஜே.சூர்யாவுக்கு உண்டு. பின்னர் தம்முடைய உதவி இயக்குநராக இருந்து, பின்னாளில் பெரும் இயக்குநராக மாறிய இயக்குநர் முருகதாஸின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த திரைப்படம் ஸ்பைடர். இந்த படத்தில் வேற லெவலில் நடித்து எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தடம் பதித்தார். இதேபோல் சாதுவான ஈ, எறும்புகளுக்கு கூட துரோகம் இழைக்காத கேரக்டராக மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, “அது இண்டர்வல்ல சண்டை போட்டாங்களா.. summer holidays-ல அவங்கவங்க நேட்டிவ்க்கு போயிட்டாங்க.. அங்க கொண்டாடிருக்கணும். இல்ல அவங்களுக்குள்ள சண்டை போட்டுகிட்டதுனால கொண்டாடாமலே இருந்திருக்கணும்!” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல் இன்னொரு ரசிகர் ஒருவர் எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்கும் போது, “சார்.. குஷி திரைப்படத்தில் சிவா மற்றும் ஜெனி இருவருக்குமே ஒரே நாளில்தான் பிறந்தநாள். ஆனால் ஒருமுறைகூட படத்தில் இருவரும் ஒன்றாக பிறந்தநாளை கொண்டாடவில்லை.

இந்த கேள்வி பல வருடமாகவே மனதில் இருக்கிறது.!” என தெரிவிக்க,  இதற்கும் சளைக்காமல் பதில் அளித்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, “அப்படியெல்லாம் இல்ல.. மனசு வலியில ரெண்டு பேரும் போன தொலைச்சுட்டதா காட்டுனா போச்சு.. Friend’s-க்கு மாறி மாறி போன் பண்ணா அவங்க ஷிவா ஸ்டேஷன்க்கு போயிட்டான்.. ஜெனி ஸ்டேஷன்க்கு போயிட்டா... அவ்ளோதான் … cool body… எது climax-ஓ.. அத நோக்கி காட்சிகளை நாம உருவாக்க வேண்டும்!” என்று தெரிவித்தார்.

இதனிடையே செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து அண்மையில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் வரும் ஞாயிறு அன்று (மே 30) மதியம் 1.30 மணிக்கு ஜூ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இப்படி பல பரிமாணங்களில் தன்னுடைய நடிப்பை மேலும் மேம்படுத்தி வரும்  எஸ்.ஜே.சூர்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தில் அடுத்து நடித்துள்ளார்.

ALSO READ: "டாப்பிக்க மாத்த பாக்குறாங்க.. இப்படி ஒரு தண்டனை கொடுக்கணும்!!" - பள்ளி ஆசிரியர் விவகாரத்தில் விஷால் காட்டமான பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

SJ Suryah viral answers to fans questions over kushi movie

People looking for online information on Ajith Kumar, Selvaraghavan, Sj suryah, Vijay will find this news story useful.