''ஒரு குழந்தை என்ன பார்த்து எலி மாமானு சொல்றான். அவன...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே 17 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'மான்ஸ்டர்'. இந்த படத்தை பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு எடிட்டிங் பணிகளை சாபு ஜோசப் செய்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் குறித்து பேசிய நடிகர் எஸ்ஜே சூர்யா, 'இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த படம் குறித்து முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதை தான் நாயகன்.

அனைத்து திரையரங்கிலும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.

இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன்.  பாகுபலிக்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார்.

''ஒரு குழந்தை என்ன பார்த்து எலி மாமானு சொல்றான். அவன...'' வீடியோ

SJ Suryah happy to shares the response of Monster Movie

People looking for online information on Justin prabhakaran, Priya Bhavani Shankar, Sj suryah will find this news story useful.