"அது பத்தி நான் சொல்லக் கூடாது".. ஷங்கரின் RC15 படம் குறித்து S.J. சூர்யா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் RC15 படம் குறித்து நடிகர் எஸ்.ஜே‌. சூர்யா பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜான்வி கபூர்.. தாவணியில் வந்து சாமி தரிசனம்! வைரல் வீடியோ

RC15 படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை  கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் 'வினயவிதேயராமா' படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.

ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது. சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சில நாட்களுக்கு முன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரும் இணைந்துள்ளார்.

இந்த படத்தின் வட அமெரிக்கா (அமெரிக்கா & கனடா) நாடுகளின் திரையரங்க ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் Shloka Entertainments கைப்பற்றி உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு நியுசிலாந்து நாட்டில் நடைபெற்றது.   மிகப்பெரிய பொருட்செலவில் சுமார் 15 கோடி ரூபாய் செலவில் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் நியுசிலாந்து நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நியுசிலாந்து படப்பிடிப்பு நிறைவடைந்தது என நடிகர் ராம் சரண், சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பாடலுக்கு பாஸ்கோ மார்ட்டிஸ் நடனம் அமைத்துள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வதந்தி வெப் சீரிஸ் வெளியீட்டை ஒட்டி நடிகர் எஸ்.ஜே. சூர்யா பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார். அப்போது RC15 படம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த எஸ்.ஜே‌. சூர்யா, "RC15 பற்றி எதுவும் சொல்ல எனக்கு அனுமதி இல்லை. ஷங்கர் சார் படத்தை முடிக்கும் வரை விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பார் என்பது உங்களுக்குத் தெரியும், RC15ல் என் பங்கு பற்றி நான் பேசுவது கூட, தயாரிப்பாளர்கள் அதை அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே நான் நடிப்பதை அறிவித்துள்ளதால் தான்." என கூறியுள்ளார்.

மேலும், "என்ன மாதிரியான படமாக RC15 இருக்கப் போகிறது?" என்ற கேள்விக்கு, "இது மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும்." என S. J.சூர்யா கூறினார்.

Also Read | Gatta Kusthi : மனைவியுடன் விஷ்ணு விஷால்! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம்..

தொடர்புடைய இணைப்புகள்

SJ Suryah answered about Shankar Ram Charan RC 15

People looking for online information on Ram Charan, RC15, Shankar, Sj suryah will find this news story useful.