இயக்குநர் கல்யாணுக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’ பாராட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘ஜாக்பாட்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாணுக்கு பழம்பெரும் நடிகர் சிவக்குமார் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

‘குலேபகாவலி’ திரைப்படத்தையடுத்து இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் வெளியான 'ஜாக்பாட்’ திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் ஜோதிகா, ரேவதி, மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, மன்சூரலிகான், ஆனந்தராஜ், உள்பட பலர் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவமளிக்கும் கதைக்களத்தைக் கொண்ட காமெடிப் படமாக வெளியான ‘ஜாக்பாட்’ திரைப்படத்தை பார்த்த பழம்பெரும் நடிகர் சிவக்குமார் இயக்குநர் கல்யாணை தனது இல்லத்திற்கு அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தின் வெற்றிக்கு சிவக்குமார் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sivakumar congratulates Jyothika's Jackpot director Kalyan

People looking for online information on 2D Entertainment, Jackpot, Jyothika, Kalyan Kumar, Sivakumar will find this news story useful.