''எனக்கு எப்பவுமே தோனி தான் தல!'' - தோனி குறித்த சர்ச்சைக்கு சிவகார்த்திகேயன் அதிரடி பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டரில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்துடன் மோதியது. இந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதனால் ஒட்டுமொத்த இந்தியாவுமே சோகத்தில் மூழ்கியது. இந்த போட்டியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தோனியும், ஜடேஜாவும் இறுதிவரை கடினமாக போராடினர்.

மேலும் தோனி குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தோனி நினைத்திருந்தால் வெற்றி பெற வைத்திருக்கலாம் என்று அவர் மீது பல்வேறு தரப்பினரும் விமர்சனங்கள் வைத்தனர். ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவகார்த்திகேயன், உண்மையான போர்வீரர்களா வரலாற்றில் இருப்போம். ஜடேஜா மற்றும் தோனி உங்களால் நாங்கள் பெருமைப்படுகிறோம். தனிப்பட்ட முறையில் ரோகித்திற்கும், பும்ராவிற்கும் மிகப்பெரிய ரசிகன். எனக்கு எப்பவுமே தோனி தான் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan tweets about MS Dhoni and World cup team India

People looking for online information on MS dhoni, Sivakarthikeyan, World Cup will find this news story useful.