போடு! சிவாங்கி காட்டுல மழை தான்!.. ANCHOR ஆன கையோடு நடந்த இன்னொரு நல்ல விஷயம்!.. அவரே பேசிய நேரலை VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் உலகத் தமிழர்களின் மத்தியில் விரும்பத்தக்க பாடகியாகவும் எண்டர்டெயினராகவும் புகழ் பெற்றவர் சிவாங்கி.

சந்திரமுகி திரைப்படத்தில் வரும் ‘ரா ரா’ உள்ளிட்ட திரைப்பட பாடல் உள்ளிட்ட பல பாடல்களை பாடிய பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி, சூப்பர் சிங்கர் போட்டியாளராக தோன்றி, பின்னர் தனக்கே உரிய இயல்பால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எண்டர்டெயினராகவும் பிரபலமானார்.

தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஆர்டிக்கள் 15’ எனும் இந்தி படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் சிவாங்கி நடித்து வருகிறார். இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டான்’ திரைப்படத்திலும் சிவாங்கி நடிக்கிறார். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.

இப்படி பாட்டு, நடிப்பு என பல விதங்களில் பட்டையை கிளப்பி வரும் சிவாங்கி, தற்போது விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஆங்கராகவும் உருவெடுத்துள்ளார். முன்னதாக, சிவாங்கி தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்த பதிவில், ஆங்கர் என்று எழுதி ஒட்டப்பட்ட ஒரு அறையின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். சூப்பர் சிங்கரில் தோன்றி உலகமெங்கும் அறிமுகமான சிவாங்கி, அதே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஆங்கராகி இருப்பது என்பது பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் சிவாங்கிக்கு இன்ஸ்டாகிராமில் 40 லட்சம் ஃபாலோயர்கள் இணைந்து இருக்கின்றனர். அதாவது 4 மில்லியன் ஃபாலோயர்கள் அவரை பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட சிவாங்கி, “காலையில் எழுந்ததுமே 4 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் இருப்பதை தெரியவந்தது. கடவுளுக்கும், ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் நன்றி.. என்னைவிட நீங்கள் எல்லாம் தான் இந்த மைல்ஸ்டோன் நிகழ்வில் உற்சாகமாக இருப்பீர்கள். நன்றி. இன்னும் பல தூரம் செல்லவேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, ஒரு ஸ்பெஷல் லைவ் செஷனில் ரசிகர்களுன் இணைந்த சிவாங்கி, தன் படிப்பு விஷயங்களை நிறைவு செய்து விட்டதாகவும், புகழ் மற்றும் அஷ்வின் நிறைய ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அடுத்த குக் வித் கோமாளி சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் கேட்டபோது, அதை “நீங்கள் மீடிய மேசன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் தான் கேட்கவேண்டும்” என்று சிவாங்கி குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே சிவாங்கி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனுக்கான அடுத்தடுத்த ப்ரோமோக்கள் வெளியாகி வந்தன. அண்மையில் கமல்ஹாசன் நடிப்பில் ‘அடடே வாங்க வாங்க’ என்று பேசுவது போல் ஒரு ப்ரோமோ வெளியாகி இருந்தது.

இந்தப் ப்ரோமோவில், ‘நான் நானாக இருக்க முயற்சிக்கிறேன்! ஆனால் இந்த வீட்டில் அது முடியாது போல’ என்பது போல் கமல் பேசியிருந்தார். இந்த ப்ரோமோவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதியும் வெளியாகி இருந்தது. அதன் படி அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து மாலை 6 மணிக்கு பிக்பாஸ் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த நிலையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அந்த வகையில் சிவாங்கி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டு வந்தனர். தற்போது இந்த நேரலை செஷனில் சிவாங்கியிடம் இதுபற்றி கேட்கப்பட்ட போது, கண்டிப்பாக இல்லை என்று சிவாங்கி சொல்லிவிட்டார். மேலும் , “என்னை 100 நாள் பார்த்தால் உங்களுக்கே கஷ்டமாக போய்விடும்” என்று ஜாலியாக குறிப்பிடுகிறார்.

மேலும் முதல் முறை தான் ஆங்கரிங் செய்யப்போவதாக குறிப்பிட்ட சிவாங்கி, “நான் அவ்ளோ பெரிய ஆங்கர் எல்லாம் இல்லை. ஆனாலும் ஏதோ பண்ண முடிந்தால் பண்ணுவேன். அவ்வளவுதான். பாத்துக்கங்க” என கேட்டுக் கொண்டுள்ளார்.

போடு! சிவாங்கி காட்டுல மழை தான்!.. ANCHOR ஆன கையோடு நடந்த இன்னொரு நல்ல விஷயம்!.. அவரே பேசிய நேரலை VIDEO! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sivaangi opens up biggboss5 and anchoring live video

People looking for online information on CookWithComali2, Sivaangi, Trending, VijayTelevision, Vijaytv will find this news story useful.