நடிகர் ரஜினிகாந்துடன் திடீர் சந்திப்பு.. அண்ணாத்த படத்தின் அடுத்தக்கட்ட நிலை.??!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்தை அண்ணாத்த பட இயக்குநர் சிறுத்தை சிவா நேரில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ரஜினி சென்னைக்கு திரும்பினார். மருத்துவர்களும் அவரை ஓய்வில் இருக்கும்படி வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில் தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா நடிகர் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். நவம்பர் மாதம் தீபாவளி அன்று படம் வெளியாகும் என அண்மையில் அறிவிப்பு வந்த நிலையில், தற்போது மீண்டும் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவது குறித்து அவர் ரஜினிகாந்துடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்புகள் வரலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ரஜினியை சந்தித்த சிறுத்தை சிவா | Siruthai siva meets rajinkanth over annaatthe for this reason

People looking for online information on Annaatthe, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.