சிம்புவுடன் வீடியோ காலில் பேசிய பாடகி ஶ்ரீநிதி.. - மகிழ்ச்சியில் வெளியிட்ட வீடியோ வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவுடன் வீடியோ காலில் பேசியது குறித்து பாடகி ஶ்ரீநிதி தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. 

இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் சுசீந்திரன் இயக்கத்தில் மற்றுமொரு திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமடைந்த பாடகி ஶ்ரீநிதி, சிம்புவுடன் வீடியோ காலில் பேசியது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''சிம்பு ரசிகராக இருப்பதில் என்ன சந்தோஷம் தெரியுமா.? நாம் அவரை ஒரு மடங்கு நேசித்தால், அவர் நம்மை மூன்று மடங்கு நேசிப்பார்''. 

மேலும் சிம்புவுக்காக ஶ்ரீநிதி எழுதிய கவிதை ஒன்றையும் வாசித்து காட்ட, அதை கேட்ட சிம்பு கைதட்டி ரசித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

 

சிம்புவுடன் வீடியோ காலில் பேசிய பாடகி ஶ்ரீநிதி.. - மகிழ்ச்சியில் வெளியிட்ட வீடியோ வைரல் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

சிம்புவிடம் பேசிய ரசிகை மகிழ்ச்சி | Singer sreenidhi fan moment with silambarasan tr on video call

People looking for online information on Silambarasan TR, Sreenidhi will find this news story useful.