உயிருடன் இருக்கும் போதே தனக்கு சிலை செய்ய சொன்னாரா SPB ? - வெளியான உண்மை தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனக்கான சிலையை முன்பே எஸ்.பி.பி செய்ய சொல்லியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவையும் வென்று, 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர்,  செப்டம்பர் 25 பிற்பகல் ஒரு மணியளவில் காலமானார்.

இந்நிலையில் தற்போது எஸ்.பி.பி தனக்கு சிலை செய்ய சொல்லியிருக்கும் தகவல் வைரல் ஆகி வருகிறது. கடந்த ஜூன் மாதமே அவர், ராஜ்குமார் என்ற சிற்பியிடம் தனது சிலையை செய்யுமாறு தெரிவித்துள்ளாராம். ஆரம்பத்தில் தனது அப்பா அம்மாவின் சிலையை செய்து கொடுக்குமாறு கேட்ட எஸ்.பி.பி, சில நாட்களுக்கு பிறகு, தனது போட்டோவை கொண்டு அவரது சிலையை செய்து கொடுக்குமாறு கேட்டதாக, சிற்பி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். 

 

உயிருடன் இருக்கும் போதே தனக்கு சிலை செய்ய சொன்னாரா SPB ? - வெளியான உண்மை தகவல். வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தனக்காக சிலை செய்ய சொன்ன எஸ்.பி.பி | Singer SPB orders to make his statue befor his demise

People looking for online information on SP Balasubrahmanyam, SPB will find this news story useful.