பாடகர் SPB-க்கு கொரோனா பாதிப்பு - மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருப்பது மக்களிடையே சற்று ஆறுதலை அளித்துள்ளது.

இந்நிலையில் மக்களின் மனம் கவர்ந்த பாடகரான எஸ்பிபிக்கும் கொரோனா பாதித்துள்ளாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த சில நாட்களாக அசௌகரியமாக உணர்ந்தேன். லேசாக சளி மற்றும் விட்டு விட்டு காய்ச்சல் இருந்தது. நான் டெஸ்ட் செய்து கொண்டதில் எனக்கு மிக மிக மிக லேசான அளவில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நீங்கள் வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் குடும்பத்துடன் இருப்பது கடினம் என்பதால் மறுத்துவிட்டேன். அதனால் மருத்துமனையிலல் சேர்க்கப்பட்டேன்.

என்னுடைய நண்பர்கள் என்னை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள் நான் நல்ல கவனிப்பில் இருக்கிறேன். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். அதனால் யாரும் கவலைப்படத் தேவையில்லை. நான் எப்படி இருக்கிறேன் என்று தெரிந்து கொள்ள போன் பண்ணாதீர்கள். எனக்கு சிறு சளி மற்றும் காய்ச்சல் மட்டுமே மற்ற படி நன்றாக இருக்கிறேன். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று விடுவேன்.

உங்கள் அக்கறைக்கு நன்றி. நிறைய பேர் எனக்கு ஃபோன் செய்கிறார்கள். என்னால் எல்லாவற்றிற்கு பதிலளிக்க முடியவில்லை. நான் இங்கே ரெஸ்ட் எடுக்க வந்திருக்கிறேன். அதனால் எனக்கு ஃபோன் செய்யாதீர்கள், நான் நன்றாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

பாடகர் SPB-க்கு கொரோனா பாதிப்பு - மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Singer SP Balasubrahmanyam tests positive for Coronavirus, issues a video statement | பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா பாதிப்பு

People looking for online information on Corona, SP Balasubrahmanyam, SP Balasubramaniam, SPB will find this news story useful.