பாடகர் SPB-யின் உடல்நிலை குறித்த வதந்திக்கு அவரது மகன் விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதையடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

அவரது உடல் நிலை குறித்து அவரது மகனும் பாடகர் மற்றும் தயாரிப்பாளரான எஸ்பிபி சரண் தினமும் அப்டேட் வழங்கி வந்தார். இதனையடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஒன்றிணைந்து அவர் பூரண குணமாகி மீண்டு வர கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவருக்கு இன்று (24/08/2020) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாக தகவல் பரவியது. இதனையடுத்து இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள எஸ்பி சரண் அந்த தகவல் பொய்யானவை என்று கூறினார்.

மேலும் பாடகர் எஸ்பிபிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக உள்ளது எனவும் கூறினார். மருத்துவர்களிடம் கலந்துரையாடி தினமும் அப்டேட் வழங்குவதாகவும், அதுதான் சரியான தகவல் என்றும் விளக்கமளித்தார். 

 

SPB Charan Clarified the rumour about SP Balasubrahmanyam's health condition | பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்த வதந்திக்கு அவரது ம

People looking for online information on SP Balasubrahmanyam, SPB, SPB Charan will find this news story useful.